ஜூன் 25.. தேதியை குறித்த விஜய்.. அடுத்த அணுகுண்டு ரெடி.. சிக்கப்போவது யார்?
தமிழ்நாடு மின்சாரத் துறையின் வெள்ளை அறிக்கை வரும் ஜூன் 25-இல் வெளியிடப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். இந்த அறிக்கையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மின்சார வாரியத்தில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து விரிவான தகவல்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சட்டசபையில் மின்வெட்டு தொடர்பான விவாதம் எழுந்த போதும், முன்னாள் மின்சார துறை அமைச்சர் மற்றும் தற்போதைய அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார்-க்கும் பெரும் விவாதம் நடந்தது. இப்போது டிரான்ஸ்பார்மர் முறைகேடு குறித்தும், 3 வருடமாக வழக்கு நடைபெற்று வருவது குறித்தும் நிர்மல்குமார் பேசினார்.

ஜூன் 25-இல் என்ன நடக்கும்?
சமீபத்தில் தமிழ்நாட்டின் மொத்த நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியானது. இதில் அதிகளவில் கடன் சுமையில் இருக்கும் துறை மின்சார வாரியம் என்ற வெட்ட வெளிச்சமாக தெரிய வந்தது. இந்த நிலையில் வரும் ஜூன் 25-இல் தமிழ்நாசு மின்வாரியத்தின் வெள்ளை அறிக்கை வெளியிடப்படுகிறது. அதே நாளில், மின்சாரத்துறையில் புதிதாக நியமிக்கப்பட்ட 300 பேருக்கு முதல்வர் விஜய் பணி நியமன ஆணைகளை வழங்கவுள்ளார்.
இந்த வெள்ளை அறிக்கையில் மின்சார வாரியத்தின் நிதிநிலை, அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்புகள், முக்கிய கொள்முதல் நடவடடிக்கைகள் மற்றும் ஒப்பந்தங்கள் குறித்து விரிவான தகவல்கள் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முந்தைய ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டு
கடந்த ஆட்சியில் மின்சாரத்துறையில் பெரிய அளவிலான ஊழல் நடைபெற்றதாக அமைச்சர் நிர்மல்குமார் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். குறிப்பாக, தனியார் மின் உற்பத்தியாளர்கள் ஒரு மெகாவாட் உற்பத்திக்கு 25 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் கொடுக்க கட்டாயப்படுத்தப்பட்டதாக கடந்த வாரம் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் 25 லட்சம் ரூபாய் கொடுக்காமல் எந்தவொரு சோலார் திட்டமும் உள்ளே வந்திருக்க முடியாது என்றும், இந்தத் தொகையைக் கொடுத்துவிட்டுக் காத்திருப்பவர்கள் ஆயிரக்கணக்கில் இருப்பதாகவும் அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.
மின்வாரியத்தின் தற்போதைய நிலை
தமிழக மின்சார வாரியம் கடந்த இருபது ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். தற்போது சுமார் ரூ.2.5 லட்சம் கோடி கடன் சுமையை எதிர்கொண்டு வருவதாகவும் நிர்மல்குமார் கூறியுள்ளார்.
வெள்ளை அறிக்கையில் டிரான்ஸ்பார்மர் கொள்முதல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்கள், மின் கொள்முதல் ஒப்பந்தங்கள் மற்றும் கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்ட விவரங்கள் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வெள்ளை அறிக்கை வெளியான பிறகு, மின்சாரத்துறையில் கடந்த ஆட்சியில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து பொதுமக்களுக்கு தெளிவான தகவல் கிடைக்கும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications