சென்னை, கோவை என மொத்தம் 9 மாவட்டங்கள்.. அடுத்த 3 மணி நேரத்திற்கு நல்ல மழை இருக்கு! வானிலை மையம்
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்குச் சென்னை, கோவை உள்ளிட்ட மொத்தம் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவை வாட்டி வதக்கி வந்த கோடைக் காலம் முடிவுக்கு வந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் தொடங்கிய வெப்பம் ஜூலை முதல் இரண்டு வாரங்கள் வரையிலும் கூட பல இடங்களில் இருந்தது.
இதனால் அப்போது பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. ஆனால், அதன் பிறகு நிலைமை அப்படியே தலைகீழாக மாறியது. பல இடங்களில் இப்போது மழை கொட்டி தீர்த்து வருகிறது.

வட மாநிலங்கள்: இப்போது வடமாநிலங்களில் கனமழை கொட்டி வருகிறது. தலைநகர் டெல்லி, ஹிமாச்சல பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. டெல்லியில் பல முக்கிய இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. டெல்லியை விட ஹிமாச்சல பிரதேசத்தின் நிலை ரொம்பவே மோசம். அங்கே பல இடங்களில் மண் சரிவும் கூட ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இந்தளவுக்கு மோசமான மழை எங்கும் இல்லை என்பது நல்ல செய்தி.. அதேநேரம் தமிழ்நாட்டில் இப்போது பல இடங்களில் ஓரளவுக்கு நல்ல மழை பெய்து வருகிறது. ஏற்கனவே மாநிலத்தில் பருவமழை ஆரம்பித்துவிட்ட நிலையில், கணிசமான இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் ரொம்பவே சந்தோஷத்தில் இருக்கிறார்கள். இதற்கிடையே அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழை பெய்யும் என்பது குறித்த தகவல்களை வானிலை மையம் பகிர்ந்துள்ளது,
9 மாவட்டங்களில் மழை இருக்கு: அதன்படி தமிழ்நாட்டில் உள்ள 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. பெரும்பாலும் கொங்கு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி, கோவை, ஈரோடு, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம்: முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அதன் தினசரி செய்திக்குறிப்பில், இன்று (ஜூலை 15), நாளை (ஜூலை 16) தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டிருந்தது. அதேபோல வரும் ஜூலை 17 முதல் 21 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும் என்று கூறப்பட்டிருந்தது.
-
சென்னையில் கொளுத்தப்போகும் வெயில்.. இன்றும் நாளையும் 100 டிகிரியை தாண்டும்! உஷார் மக்களே! -
மயிலாடுதுறை டூ ராமநாதபுரம்.. மழை கொட்டப்போகுது! லிஸ்ட் போட்ட வானிலை மையம்! -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல்












Click it and Unblock the Notifications