ரயில் பயணிகளுக்கு ஒரு நற்செய்தி.. ஜூலை 18 முதல் எக்ஸ்பிரஸ் ரயில்களில் நடக்கும் முக்கிய மாற்றம்
சென்னை: இனி இந்த 9 எக்ஸ்பிரஸ் ரயில்கள் முக்கிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: நெல்லை- பாலக்காடு - நெல்லை (வண்டி எண் 16791/ 16792) பாலருவி எக்ஸ்பிரஸ் குண்டாரா, கீழக்கடையம் ரயில் நிலையங்களில் ஜூலை 18ஆம் தேதி முதல் நின்று செல்லும்.

சென்னை எழும்பூர்- மதுரை (வண்டி எண் 12637) பாண்டியன் எக்ஸ்பிரஸ் மணப்பாறை ரயில் நிலையத்தில் ஜூலை 18 ஆம் தேதி முதல் நின்று செல்லும். சென்னை எழும்பூர்- ராமேஸ்வரம் (வண்டி எண் 22661) ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் மண்டபம் ரயில் நிலையத்தில் ஜூலை 18ஆம் தேதி முதல் நின்று செல்லும்.
அது போல் நெல்லை- பாலக்காடு செல்லும் வண்டி எண் 16791 பாலருவி எக்ஸ்பிரஸ் பாவூர்சத்திரம் ரயில் நிலையத்தில் ஜூலை 19ஆம் தேதி முதல் நின்று செல்லும். ராமேஸ்வரம் டூ பனாரஸ் வாராந்திர ரயில் ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் ஜூலை 19 ஆம் தேதி முதல் நின்று செல்லும். இதன் வண்டி எண் 22535.
சென்னை எழும்பூர்- நெல்லை (வ.எண் 12631) நெல்லை எக்ஸ்பிரஸ் சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஜூலை 18 ஆம் தேதி முதல் நின்று செல்லும். கோவை- ராமேஸ்வரம் வாரத்திற்கு ஒரு முறை செல்லும் ரயில் சிவகங்கை ரயில் நிலையத்தில் ஜூலை 18ஆம் தேதி முதல் நின்று செல்லும். இதன் வண்டி எண் 16618 ஆகும். மேலும் சென்னை எழும்பூர்- தூத்துக்குடி (வண்டி எண் 12693) முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் திருமங்கலம் ரயில் நிலையத்தில் ஜூலை 18 ஆம் தேதி முதல் நின்று செல்லும்.
சென்னை- எழும்பூர்- கொல்லம்- சென்னை எழும்பூர் (வண்டி எண் 16101/16102) கொல்லம் எக்ஸ்பிரஸ் ஆரியங்காவு ரயில் நிலையத்தில் ஜூலை 18ஆம் தேதி முதல் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேற் சொன்ன 9 ரயில்களும் முக்கியமான ரயில்கள் அந்த ரயில்கள் நிற்பதாக சொன்ன நிலையங்களும் முக்கியமானவை. இதனால் பயணிகள் மகிழ்ச்சியாக உள்ளனர்.












Click it and Unblock the Notifications