நல்ல செய்தி.. ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நுரையீரல் தொற்றிலிருந்து குணமடைந்த 98 சதவீதம் பேர்!
சென்னை: சென்னை அரசு ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் கொரோனா மையத்தில் இருந்த 98 சதவீதம் பேர் நுரையீரல் தொற்றிலிருந்து குணமடைந்துவிட்டனர்.
இதுதொடர்பாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கடந்த 1ம் தேதி கொரோனாவிற்கு பிந்தைய தொடர் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டது.
இந்த மையத்தில் உடல் பருமன் பரிசோதனை, மூச்சு திறனாய்வு, நடைபயிற்சி, சிடி ஸ்கேன், தானியங்கி முதல் ரத்த பரிசோதனை, இயன்முறை பயிற்சி, கண் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு சோதனைகள் செய்யப்படுகின்றன.

ஆலோசனை
இதன் முடிவில் சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கப்படுகிறது. தற்போது வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 150 பேருக்கு மீண்டும் சிடி ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டதில் 98 சதவீதம் பேர் நுரையீரல் தொற்றில் இருந்து முழுவதும் குணமடைந்தது தெரியவந்துள்ளது.

நுரையீரல்
கொரோனா தொற்று இருப்பவர்களுக்கு நுரையீரலில் ஏற்படும் தொற்றால்தான் அவர்கள் மரணிக்கும் நிலை ஏற்படுகிறது. எனவேதான் கொரோனா தொற்று இருக்கும் நபர்களுக்கு முதலில் நுரையீரல் மீது கவனம் செலுத்தப்படுகிறது. நுரையீரலில் உள்ள தொற்றை கவனமாக நீக்கிவிட்டாலே கொரோனா குறித்த கவலையே வேண்டாம்.

சிகிச்சை
காய்ச்சல், சளியை சித்த மருத்துவம், மருந்து மாத்திரைகளால் குணப்படுத்திக் கொள்ளலாம். அது போல் கெட்டியான சளியை கரைப்பதற்கான சிகிச்சைகளும் உள்ளன. அதையும் செய்யலாம். மேலும் யோகாசனங்களும் அரசு யோகா மருத்துவர்களால் பயிற்றுவிக்கப்படுகின்றன.

6 மாதங்கள்
இதை கொண்டு நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொள்ளலாம். மேலும் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு வந்தாலும் குறைந்தபட்சம் 6 மாதங்களுக்காவது நாம் கவனமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியமானதாகும் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications