தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய நாளாக இருக்கும்.. வெதர்மேன் தந்த ஸ்பெஷல் அப்டேட்.. முழு விவரம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வானிலையை பொறுத்தவரை இன்று தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய நாளாக இருக்க போகிறது என்று தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமாக பெய்து வருகிறது. இதற்கு முந்தைய வடகிழக்கு பருவமழையை விட இந்த வருடம் மிக அதிக மழை பெய்து உள்ளது.

இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகளை தொடர்ந்து தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் மிக தீவிரமாக கனமழை பெய்து வருகிறது. இது தாழ்வு பகுதியாக உருவெடுக்கவில்லை என்றாலும் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து உள்ளது.

 அரபிக்கடல்

அரபிக்கடல்

இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள கணிப்பில், அரபிக்கடலில் புதிய தாழ்வுப்பகுதி நாளை உருவாக உள்ளது. இதனால் இன்று தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய நாளாக இருக்க போகிறது. இதனால் உள் தமிழகம், மேற்கு தமிழகம், தென் தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்யும். கடந்த 2 நாட்களை விட சென்னையில் மழை குறைய வாய்ப்புள்ளது மேலும் இன்று இரவு மேகங்கள் எப்படி உருவாகிறது என்பதையும் கவனிக்க வேண்டும்.

 மன்னார் வளைகுடா

மன்னார் வளைகுடா

தற்போது மன்னார் வளைகுடாவில் சுழல் உருவாகும் வாய்ப்பு உள்ளது. இதனால் தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நேற்று இரவு பெய்த மழை என்பது எதிர்பார்த்த அளவிலேயே இருந்தது. பெரிய அளவில் இது பொதுமக்களின் துயரங்களை அதிகரிக்கவில்லை. நாம் பயந்து கொண்டிருந்த அந்த மிகப்பெரிய மழை மேகங்கள் இன்று சென்னையை நெருங்கி மேலே நகர உள்ளது, இதனால் சென்னையில் இன்றும் மழை பெய்யும். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக மழை குறையும்.

சென்னை

சென்னை

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று நல்ல மழை பெய்யலாம். ஆனால் மொத்தமாக மழை மேகங்கள் சென்னைக்கு மேல் தெற்கு ஆந்திராவை நோக்கி நகரும் வாய்ப்பு உள்ளது. இதனால் ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களிலும் மழை பெய்யும். சென்னை மக்கள் அச்ச்சப்பட வேண்டாம்.

 லேசான மழை

லேசான மழை

சென்னையில் தற்போது லேசான மழையே பெய்யும். பெரிய மழை பெய்தால் அப்டேட் கொடுக்கிறேன். டெல்டா முதல் கடலூர் வரையிலான பகுதிகளில் நல்ல மழை பெய்து உள்ளது. அதோடு இன்றும் கடலூர் மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. தற்காலிக சூழல் காரணமாக தென் மாவட்டங்களில் இன்று இரவும், நாளை காலையும் கனமழையை எதிர்பார்க்கலாம்.

Recommended Video

    School Leave | Tamilnadu Rain Update | Tamilnadu Weatherman | Chennai Rain | Oneindia Tamil
    பாம்பன் மண்டபம்

    பாம்பன் மண்டபம்

    பாம்பன் மண்டபம் பெல்ட்டில் உருவாகும் தற்காலிக சூழல் காரணமாக ராமநாதபுரத்தில் மிக கனமழை பெய்யும். தூத்துக்குடி - நெல்லை - தென்காசி மாவட்டங்களிலும், குமரியில் சில இடங்களிலும் கனமழை பெய்யும், என்று தமிழ்நாடு வெதர்மேன் தனது கணிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+