தென்னை மரத்தின் உச்சியில் 3 நாட்களாக சிக்கித் தவித்த பூனை பத்திரமாக மீட்பு.. மக்கள் பாராட்டு
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் தென்னை மரத்தின் உச்சியில் 3 நாட்களாக சிக்கி தவித்த பூனையை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.
சென்னை அசோக் நகரில் முதல் குறுக்குத் தெருவில் ஒரு வீட்டில் 60 அடி தென்னை மரம் உள்ளது. இந்த மரத்தின் உச்சியில் ஒரு பூனை சிக்கி தவித்தது. அதுவாக இறங்கி போய்விடும் என கருதிய நிலையில் பயத்தின் காரணமாக அங்கேயே இருந்தது அந்த பூனை.

இதையடுத்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் பக்கத்து வீட்டின் மாடிக்கு சென்று ஏணி மூலம் தென்னை மரத்தில் ஏறினர்.
பின்னர் மரக் கிளையை உலுக்கினர். சற்று இறங்கி வந்த பூனையை அவர்கள் பத்திரமாக மீட்டெடுத்தனர். அப்போது அங்கிருந்த மக்கள் தீயணைப்புத் துறையினருக்கு பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications