இந்தியாவுக்கு பொதுமொழியாக இந்தி இல்லையே... இதுதான் ரஜினிகாந்தின் ஆதங்கமா?
Recommended Video
சென்னை: இந்தி பொதுமொழி தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் வெளிப்படுத்தியிருக்கும் ஆதங்கம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
ஒரே நாடு ஒரே மொழி; ஒரே நாடு ஒரே கட்சி என மத்திய அரசு படுதீவிரமாக தமது கொள்கைகளை முன்னெடுப்பதில் முனைப்பு காட்டுகிறது. நாடு முழுவதும் இது பெரும் விவாதங்களை எழுப்பியிருக்கின்றன.
குறிப்பாக இந்தியாவின் பொது மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்கிற உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்து பெரும் சர்ச்சையாகி உள்ளது. இந்தி பேசாத மாநிலங்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றன.

ரஜினிகாந்த் கருத்து
தமிழகத்தில் இந்தி திணிப்புக்கு எதிராக வரும் 20-ந் தேதி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசினார்.

இந்தியை ஏற்கமாட்டார்கள்
இந்தி திணிப்புக்கு எதிராக அவரும் கருத்துகளை தெரிவித்தார். தமிழகம் மட்டுமல்ல தென்னிந்தியாவும் இந்தி திணிப்பை ஏற்காது என்றெல்லாம் கூறிய ரஜினி உதிர்த்த இன்னொரு முத்துதான் சர்ச்சையாகி விவாதப் பொருளாகி இருக்கிறது.

பொதுமொழிக்கு ஆதரவு
அதாவது "எந்தவொரு நாட்டுக்கும் பொதுவான ஒரு மொழி இருப்பது வளர்ச்சிக்கு நல்லது; துரதிருஷ்டவசமாக இந்தியாவில் அதை கொண்டுவர முடியாது" என்று ரஜினிகாந்த் கூறியிருக்கிறார். அதாவது இந்தியாவில் இந்தி பொதுமொழியாக இருந்திருக்கலாம்..அதை துரதிருஷ்டவசமாக கொண்டுவர முடியாத நிலை இருக்கிறது என்பதுதான் ரஜினிகாந்தின் ஆதங்கமாக வெளிப்படுகிறது.

பாஜக பாணியில் ரஜினி
திருவள்ளுவரை ஒருபுறம் தலையில் தூக்கி வைப்பதாக போக்கு காட்டிக் கொண்டு இன்னொரு புறம் தமிழுக்கு எதிரான அத்தனை செயல்பாடுகளையும் மேற்கொள்வது பாஜகவின் பாணி. ரஜினிகாந்தும் கூட இந்தி திணிப்பு கூடாது என்றே கூறிக் கொண்டே இந்தி பொதுமொழியாக இருந்திருக்கலாம்.. இல்லாதது துரதிருஷ்டவசமானது என ஆதங்கத்தை கொட்டிருயிருக்கிறார்.

முரண்பாடான கருத்துகள்
எந்த ஒரு பிரச்சனையிலும் முன்னுக்குப் பின்னாக கருத்து சொல்வதும் கூட ரஜினியின் பாணியாகத்தான் இருக்கிறது. சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற பின்பற்ற வேண்டும்; அதேநேரத்தில் ஐதீகத்தையும் மதிக்க வேண்டும் என கூறியிருந்தார் ரஜினிகாந்த். அதேபோல் மீடு விவகாரத்தில் பெண்கள் பாதுகாக்கப்படவேன்டும்; ஆனால் பெண்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது என்றார், இப்போதும் அதேபாணியில்தான் கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் ரஜினிகாந்த்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications