குஷ்பு வீட்டருக்கே நம்பர் பிளேட் இல்லாமல் 10 நாளாக நிற்கும் கன்டெய்னர் லாரி.. போலீஸுக்கு தகவல்
சென்னை: சென்னை சாந்தோமில் குஷ்பு வீட்டருகே நம்பர் பிளேட் இல்லாமல் 10 நாட்களாக ஒரு கன்டெய்னர் லாரி நிற்பதாக புகார் எழுந்தது.
நடிகை குஷ்பு சென்னை சாந்தோம் பகுதியில் வசித்து வருகிறார். அவரது வீட்டருக்கே ஒரு கன்டெய்னர் லாரி 10 நாட்களாக நிற்கிறது. அதில் நம்பர் பிளேட் கூட இல்லை என கூறப்படுகிறது.
அந்த லாரியை நடிகை குஷ்பு படம் பிடித்து டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில் கடந்த 10 நாட்களாக நான் வசிக்கும் தெருவின் முனையில் இந்த கன்டெய்னர் லாரி நின்றுக் கொண்டிருக்கிறது. இது குறித்து ஒருவரும் புகார் அளிக்க முன்வரவில்லை.

சென்னை போக்குவரத்து
நம்பர் பிளேட் கூட இல்லாத லாரியால் சந்தேகம் எழுந்துள்ளது. எனவே இந்த லாரி குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை போலீஸுக்கும் பதிவை அனுப்பியிருந்தார். அதில் சென்னை போக்குவரத்து துறை எந்த பகுதியில் வாகனம் நிற்கிறது என்பது குறித்த தகவல்களை கேட்டுள்ளனர்.

வாகனம்
அதற்கு குஷ்பு, எனது புகாருக்கு உடனடியாக பதில் அளித்ததற்கு நன்றி, பாராட்டுக்குரியது என கூறிய குஷ்பு அந்த வாகனம் நின்று கொண்டிருக்கும் இடத்தையும் தெரிவித்துள்ளார்.
|
தெருவில்
முன்னதாக குஷ்பு டுவிட்டரில் புகைப்படம் வெளியிட்டிருந்ததற்கு நெட்டிசன்கள் அவரை கிண்டல் செய்தனர். மேலும் நீங்கள் ஏன் போலீஸில் சொல்லவில்லை என்றும் கேட்டிருந்தனர். இதனால் கோபமடைந்த குஷ்பு, அந்த லாரி எனது தெருவில் நிற்கவில்லை.

குஷ்பு வாக்குவாதம்
அப்படியிருந்தால் நானே புகார் அளித்திருப்பேன். யாராவது உதவ முடிந்தால் உதவுங்கள். இல்லாவிட்டால் வாயை மூடிக் கொண்டு நடையை கட்டுங்கள் என கூறியிருந்தார். இது தொடர்பாக ஏராளமானோருடன் குஷ்பு டுவிட்டரில் வாக்குவாதம் செய்தார்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications