சென்னையில் முக்கிய சிக்னலில் நெட்டிசன் எடுத்த ஒற்றை போட்டோ.. மொத்தமாக சிக்கின வாகன ஓட்டிகள்!
சென்னை: சென்னை வடக்கு ரயில் நிலையம் எதிரே தினந்தந்தி சிக்னலில் பாதசாரிகள் கடக்கக்கூடிய பாதையில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி சிக்னலுக்காக காத்திருந்த 3 இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் போக்குவரத்து சிக்னலை மீறி சென்றாலோ அல்லது சிக்னலில் உள்ள பாதசாரிகள் லைனில் போய் சிக்னலில் காத்திருந்தாலோ கண்டிப்பாக அபராதம் விதிப்பார்கள். போலீஸ் இருந்தால் அபராதம் என்று இல்லை.போலீஸே ஆன்ஸ்பாட்டில் இல்லாவிட்டாலும், பொதுமக்களின் புகாரின் பேரில் அபராதம் விதிப்பார்கள்.

சென்னையில் மற்ற ஊர்களை போல் ஹெல்மெட் அணியாமலோ அல்லது இருசக்கர வாகனத்தில் 3 பேர் செல்வதோ நிச்சயம் கடினமானது.மற்ற ஊர்களில் அபராதம் போலீஸ் தான் விதிப்பார்கள். இங்கு அப்படி இல்லை.. உங்களை யாராவது புகைப்படம் எடுத்து புகார் அளித்தாலும் அபராதம் விதிப்பார்கள். எனவே கவனமாக செல்ல வேண்டும்.
அதேபோல் நீங்கள் பைக் வாங்கும் போதே இரண்டு ஹெல்மெட் வாங்கிவிடுவது நல்லது. ஒரு ஹெல்மெட் மட்டும் வாங்கினாலும் 500 ரூபாய் அபராதம் நிச்சயம் உங்களுக்கு விதிக்கப்பட வாய்ப்பு. அதாவது நீங்கள் ஹெல்மெட் போட்டு உங்கள் பின்னால் உள்ளவர் ஹெல்மெட் போடாமல் சென்றால் 500 ரூபாய் அபராதம் உறுதியாகிவிடும். சென்னையில் இந்த விதிமுறை மிக தீவிரமாக பின்பற்றப்படுகிறது.
தலைகவசம் அணியாமல், இருசக்கர வாகனத்தில் 3 பேர் சென்றால் அபராதம் நிச்சயம் அதிகமாக இருக்கும்.சென்னையில் பல இடங்களில் தானியாங்கி கேமரா பொறுத்தப்பட்டுள்ளது. இந்த கேமராக்கள் தானாகவே புகைப்படம் எடுத்து அபராதம் விதிக்கும்
இந்த தானியாங்கி கேமராக்கள் சென்னையில் முக்கிய சிக்னலில் நிற்காமல் மீறி சென்ற கார்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கின்றன. ஒருவழி பாதையில் சென்றாலும் சில பகுதிகளில் அபராதம் உறுதி. சிக்னலில் லைன் கோட்டை தாண்டி நின்றாலும் அபராதம் விதிக்கப்படுகிறது.
இதுதவிர சென்னையில் போக்குவரத்து போலீசார் காலை, மதியம் மற்றும் மாலை வேளைகளில் சோதனை நடத்துகிறார்கள் . அதேநேரம் பொதுமக்களும் தங்கள் கண் முன்னே யாராவது போக்குவரத்து விதிகளை மீறி சென்றால் உடனே சென்னை போக்குவரத்து போலீசாரை ட்விட்டரில் டேக் செய்து புகார் அளிக்கிறார்கள். அப்படி புகார் அளித்தால் உடனே நடவடிக்கையும் எடுக்கிறார்கள். போக்குவரத்து விதிகளை மீறியவர்களுக்கு ஆன்லைனிலேயே அபராதமும் விதிக்கிறார்கள்.
குழந்தையை பள்ளிக்கு விட வந்தவர்கள் தொடங்கி, பக்கத்து தெருவில் காய் வாங்க போனவர்கள் வரை ஹெல்மெட் அணியாமல் போய் சென்னையில் பலர் தினமும் அபராதம் செலுத்தி வருகிறார்கள் .சென்னையில் போக்குவரத்து போலீசார் தினமும் ட்விட்டரில் பொதுமக்களின் புகார்களுக்கு பதில் அளித்து நடவடிக்கை எடுத்து சலானை ட்விட்டரில் பதிவிடுகிறார்கள்.
அப்படித்தான் சென்னை வடக்கு ரயில் நிலையம் எதிரே தினந்தந்தி சிக்னலில் பாதசாரிகள் கடக்கக்கூடிய பாதையில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி சிக்னலுக்காக காத்திருந்த 3 இருசக்கர வாகன ஓட்டிகள் குறித்து நெட்டிசன் ஒருவர் சென்னை போக்குவரத்து போலீசாரை டேக் செய்து கோரிக்கை வைத்தார். அவர்கள் அனைவருக்கும் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு சலான் ட்விட்டரில் ஷேர் செய்யப்பட்டுள்ளது. எனவே சிக்னலில் போடப்பட்டுள்ள ஸ்டாப் லைனை தாண்டி நிற்காதீர்கள். அபராதத்தில் சிக்கி கொள்ளாதீர்கள்
-
வாகன ஓட்டிகளுக்கு குஷி.. தடம் தெரியாமல் மாறும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை? புது ப்ளூபிரிண்ட் ரெடி! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
சென்னையின் தலையெழுத்தை மாற்றும் ப்ராஜெக்ட்.. ரெடியாகும் 'ரூட் மேப்'... எகிறப்போகும் வேகம்! -
Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவுமா? சென்னையில் பீதி.. பொது சுகாதாரத்துறை விளக்கம் -
ரயில்கள் மீது கல் வீசினால் 10 ஆண்டு ஜெயில் தண்டனை.. சென்னை ரயில்வே கோட்டம் கடும் எச்சரிக்கை! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும்












Click it and Unblock the Notifications