அயனாவரம் ஸ்டோர் ரூமில் அதிகாலையில் எரிந்த பல்பு.. தர்மபுரி காவலருக்கு இப்படியா ஆகணும்
சென்னை: தர்மபுரியைச் சேர்ந்தவர் விஜய் என்பவர் சென்னை புதுப்பேட்டையில் உள்ள ஆயுதப்படையில் காவலராக வேலை செய்து வந்தார். அயனாவரம் புது தெருவில் உள்ள ஒரு வீட்டின் 2-வது மாடியில் தன்னுடன் தன்னுடன் வேலை செய்யும் 2 போலீஸ்காரர்களுடன் தங்கி இருந்தார். நேற்று காலை ஒரே அறையில் தங்கி இருக்கும் தினேஷ் என்ற போலீஸ்காரர் கண்ட காட்சி ஆடிப்போக வைத்துள்ளது.
காவலர்கள் மன அழுத்தத்தில் தவறான முடிவெப்பது அதிகமாகி வருகிறது. வேலை, மனஅழுத்தம், குடும்ப பிரச்சனை காரணமாக அப்படி தவறான முடிவெடுக்கிறார்கள்.தர்மபுரியைச் சேர்ந்த காவலர் தவறான முடிவெடுத்துள்ளார்.

தர்மபுரியைச் சேர்ந்த 27 வயதாகும் விஜய் என்பவர் சென்னை புதுப்பேட்டையில் உள்ள ஆயுதப்படையில் போலீசாக வேலை செய்து வந்தார். அயனாவரம் புது தெருவில் உள்ள ஒரு வீட்டின் 2-வது மாடியில் தன்னுடன் வேலை செய்யும் 2 காவலர்களுடன் தங்கி இருந்தார்.
நேற்று காலை 5 மணி அளவில் இவருடன் ஒரே அறையில் தங்கி இருக்கும் தினேஷ் என்ற காவலர், பணிக்கு செல்வதற்காக எழுந்து கதவை திறக்க முயற்சி செய்திருக்கிறார். அப்போது கதவு வெளிப்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தினேஷ் வீட்டின் உரிமையாளர் வசந்தாவுக்கு தொலைபேசி மூலம் தெரிவித்தார். வசந்தா மாடிக்கு வந்து கதவை திறந்து விட்டு வந்துருக்கிறார்.
அப்போது அங்குள்ள ஸ்டோர் ரூமில் வழக்கத்துக்கு மாறாக மின்விளக்கு எரிந்து கொண்டிருந்தது.இதைக் கண்டு சந்தேகத்தின்பேரில் தினேஷ் அங்கு சென்று பார்த்தார். அப்போது அந்த அறைக்குள் போலீஸ்காரர் விஜய், தூக்குப்போட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு காவலர் தினேஷ் அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்த உடனே அயனாவரம் போலீசாருக்கு தினேஷ் தகவல் தெரிவித்தார். இந்த புகாரின்பேரில் அயனாவரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தூக்கில் தொங்கிய விஜய் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விஜயின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். குடும்பப் பிரச்சினை காரணமாக அவர் வாழ்க்கையை முடித்துக் கொண்டிருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
தற்கொலை எண்ணம் இருந்தால் அல்லது மன அழுத்தத்தில் இருந்தால், உடனடியாகத் தொடர்புகொள்ள வேண்டிய இலவச உதவி எண்கள்
Tele MANAS (தேசிய உதவி எண்)14416 : மத்திய அரசின் 24/7 மனநல உதவி மற்றும் ஆலோசனை எண். (1-800-891-4416 என்றும் அழைக்கலாம்).
மாநில உதவி எண் (104) 104 தமிழ்நாடு அரசின் சுகாதார உதவி சேவை (இதுவும் மனநல ஆதரவு வழங்குகிறது).
ஸ்னேகா (Sneha) 044-24640050 சென்னையில் உள்ள தற்கொலை தடுப்பு உதவி அமைப்பு.
AASRA +91-22-27546669 தற்கொலை தடுப்பு மற்றும் ஆலோசனைக்கான 24/7 சேவை
-
தூக்கி தூக்கி போடும் மத்திய கைலாஷ் எல் வடிவ பாலம்! பார்த்தாலே அஞ்சும் வாகன ஓட்டிகள்! அன்புமணி அட்டாக் -
டிரஸ் மாற்ற போன சீரியல் நடிகை கண்ட காட்சி.. பக்கத்து வீட்டுக்காரரின் கேவலம்! குழப்பத்தில் சென்னை -
ஆளுநர் ரவி, குஷ்பு குறித்து அவதூறு பேச்சு.. சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் சிறை தண்டனை நிறுத்தம் -
சென்னை ஹைகோர்ட் புதிய தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி நியமனம்! யார் இவர்? -
மாஃபியா கட்டுப்பாட்டில் சென்னை மெரினா கடற்கரை கடைகள்.. தூண்டிவிடுகிறார்களா? நீதிபதிகள் சந்தேகம் -
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சுற்றி கட்டுமானங்களுக்கு தடை! பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து வழக்கு! -
முடிவுக்கு வரும் 17 ஆண்டுகால காத்திருப்பு! இன்று வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் ரூட்டில் சோதனை -
நடுவானில் யூடர்ன் போட்ட சென்னை விமானம்.. துபாயில் தரையிறங்க முடியாததால் மீண்டும் திரும்பியது! -
பட்டா மாறுதல் செய்ய இதோ ஆன்லைனில் ஈஸி வழி? லோன் கிடைப்பதில் சிக்கல்? 24 மணி நேரத்தில் தீர்வு -
ஓபிஎஸ் திமுகவில் சேர்ந்ததற்காக கார் ஓட்ட மறுத்தாரா டிரைவர்? வைரல் வீடியோவிற்கு விளக்கம் -
சிறகடிக்க ஆசை: சிந்தாமணி பற்றி ரோகிணிக்கு தெரிந்த உண்மை.. வீட்டை விட்டு போன மீனா! முத்து எடுத்த முடிவு -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி.. இலவசமாக நகை மீட்கலாமா? ஆசையில் விழும் மக்கள் கவனிக்க வேண்டியது











Click it and Unblock the Notifications