சென்னை மேயர் பிரியாவுக்கு அம்மா கொடுத்தனுப்பும் லஞ்ச் பாக்ஸ்! ஹோட்டல் உணவுகளுக்கு நோ!
சென்னை: சென்னை மேயர் பிரியா ராஜனுக்கு இன்னுமே அவரது அம்மா தான் வீட்டிலிருந்து ரிப்பன் மாளிகைக்கு லஞ்ச் பாக்ஸ் கொடுத்து அனுப்புகிறார்.
பள்ளி -கல்லூரி நாட்களில் எப்படி வீட்டிலிருந்து லஞ்ச் பாக்ஸ் எடுத்துச் செல்வாரோ அதேபோல் தான் மேயராகிய பிறகும் வீட்டிலிருந்து லஞ்ச் பாக்ஸ் எடுத்துச் செல்கிறார் பிரியா ராஜன். சில நாட்கள் ஆய்வுப்பணிகளுக்காக காலையில் சீக்கிரமே புறப்பட வேண்டியிருந்தால், மதியம் ரிப்பன் மாளிகைக்கு சாப்பாடு வந்துசேர்ந்துவிடும்.

சென்னை மேயர் பிரியா ராஜனை பொறுத்தவரை ஹோட்டல் உணவுகளை முற்றிலும் தவிர்க்கக் கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. நினைத்தால் தினமும் வகை வகையாக தினம் ஒரு ஹோட்டலில் மதிய உணவு வாங்கிவரச் சொல்லி சாப்பிட முடியும். ஆனால் அது போல் செய்யாமல் இன்னுமே பள்ளி மாணவி போல் வீட்டிலிருந்து தான் லஞ்ச் பாக்ஸ் எடுத்து வந்து சாப்பிடுகிறார்.
பல நேரங்களில் காலை உணவு சாப்பிடக் கூட நேரமில்லாமல் ஆய்வு மற்றும் அலுவல் பணிகளில் பிஸியாக இருந்துவிடுகிறார் பிரியா ராஜன். தமிழகத்தின் முக்கிய மாநகராட்சி மேயர்கள் சர்ச்சைகளில் சிக்கியது போல் இல்லாமல் இதுவரை எந்த சர்ச்சைகளிலும் சிக்காமல் மாநகராட்சி நிர்வாகத்தை வழி நடத்திச் செல்கிறார்.

பொதுவாக அரசியல்வாதிகளை பொறுத்தவரை அது ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி, வீட்டிலிருந்து சாப்பாடு எடுத்துச் சென்று சாப்பிடுவது என்பது அரிய நிகழ்வு தான். ஆனால் இந்த விவகாரத்தில் சென்னை மேயர் பிரியா ராஜன் விதி விலக்கு என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications