ஹிட் லிஸ்டில் இருந்த அதிகாரி.. சுற்றிவளைத்த ஐடி டீம்.. வசமாக மாட்டிக்கிட்டாரே.. கருப்பு ஆடு யாரு?
சென்னை: சமீபத்தில் முக்கியமான அதிகாரி ஒருவரை வருமான வரித்துறை அதிகாரிகள் பிடித்து விசாரித்து உள்ளனர். ஏர்போர்ட்டுக்கு வந்த வருமானவரித்துறை அதிகாரிகள், அந்த அதிகாரியை மடக்கிப் பிடித்து, தீவிரமாக விசாரணை நடத்தியிருக்கிறார்கள். தமிழக அதிகாரியை மத்திய அரசு அதிகாரி எதற்காக மடக்கி விசாரிக்க வேண்டும்? பறிமுதல் செய்யப்பட்ட அந்த பணம் யாருடையது ? ப்ளாக் மணியா? கணக்கில் காட்டப்பட்ட பணமா? என்று தீவிரமான விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அப்படி என்ன நடந்தது.. வாருங்கள் பார்க்கலாம்!
சென்னையிலிருந்து வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்குச் செல்லும் சில சந்தேகிக்கும் தலைவர்கள் மற்றும் நெருக்கமானவர்களைத் தொடர்ச்சியாக சென்னை ஏர்போர்ட்டில் மத்திய வருமானவரித் துறையும், மத்திய வருவாய் புலனாய்வுத் துறையும் கண்காணித்து வருகிறது. அடிக்கடி இப்படி சோதனைகள் நடக்கின்றன.

இதற்காக வருமானவரித் துறையும், மத்திய வருவாய் புலனாய்வுத் துறையும் ஹாட் லிஸ்ட் ஒன்றை வைத்துள்ளது. இந்த லிஸ்ட் அடிப்படையில்தான் அதிகாரிகளிடம் சோதனைகள் நடத்தப்படுகின்றன. அவர்கள் தரும் விபரங்களை வைத்து அவ்வப்போது விசாரணைகளும் செய்யப்படுகின்றன. அடிக்கடி டெல்லிக்கு இது போல புகார்கள் செல்வதாகவும் கூறப்படுகிறது. சிலர் வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் பணம் கொண்டு செல்வதாக புகார்கள் உள்ளது .
தனி நபர்கள் பணம் கொண்டு செல்வது என்பது தனி. அதே சமயம் அரசு அதிகாரிகள் பணம் கொண்டு செல்வது என்பது தனி. அரசு அதிகாரிகள் கையில் பணம், அதிக அளவில் பொருள் கொண்டு சென்றால் கணக்கு காட்ட வேண்டும்.
அதேபோல அதிகாரிகளும் கண்காணிக்கப்படுகிறார்கள். சமீபத்தில் முக்கியமான அதிகாரி ஒருவரை வருமான வரித்துறை அதிகாரிகள் பிடித்து விசாரித்து உள்ளனர். ஏர்போர்ட்டுக்கு வந்த வருமானவரித்துறை அதிகாரிகள், அந்த அதிகாரியை மடக்கிப் பிடித்து, தீவிரமாக விசாரணை நடத்தியிருக்கிறார்கள்.
என்ன நடந்தது?: கடந்த 25-ந்தேதி சென்னையிலிருந்து டெல்லிக்கு செல்வதற்காக சென்னை ஏர்போர்ட்டுக்கு வந்திருந்தார் தமிழக தொழிலாளர் நல உதவி ஆணையர் அந்தஸ்தில் உள்ள ஒரு அதிகாரி. அவரும் அந்த ஹாட் லிஸ்டில் இருந்தவராம்.
இவரைப் பற்றி சில புகார்கள் வருமானவரித்துறைக்கு சொல்லப்பட்டதால், அந்த அதிகாரியை வருமானவரித்துறை கண்காணித்தபடி இருந்துள்ளது. டெல்லி செல்ல அவர் ஏர்போர்ட் செல்வதை அறிந்து ஏர்போர்ட்டுக்கு வந்த வருமானவரித்துறை அதிகாரிகள், அந்த அதிகாரியை மடக்கிப் பிடித்து, தீவிரமாக விசாரணை நடத்தியிருக்கிறார்கள்.
அப்போது, அவரிடமிருந்து 37 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர் வருமானவரித்துறையினர். பிறகு அவரை விடுவித்து விட்டனர். தமிழக அதிகாரியை மத்திய அரசு அதிகாரி எதற்காக மடக்கி விசாரிக்க வேண்டும்? பறிமுதல் செய்யப்பட்ட அந்த பணம் யாருடையது ? ப்ளாக் மணியா? கணக்கில் காட்டப்பட்ட பணமா? என்பதில் ஏகப்பட்ட மர்மம் இருக்கிறது என்று சென்னை விமான நிலைய வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, அந்த தமிழக அதிகாரியை எதற்காக மத்திய அரசு அதிகாரிகள் விடுவித்தனர்? அவரிடம் தவறில்லை எனில் கைப்பற்றப்பட்ட பணத்தை ஏன் திருப்பித் தரவில்லை? என்கிற கேள்விகளுடன் விபரமறிந்த தமிழக அதிகாரிகள் தரப்பில் விவாதிக்கப்படுகிறது. இந்த விவகாரம் விரைவில் பூதாகரமாகலாம் என்றும் சொல்லப்படுகிறது.
-
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம்












Click it and Unblock the Notifications