தண்டையார்பேட்டை ஐஓசியில் நடந்தது என்ன? 70 ஆயிரம் எத்தனால் டேங்குகள் வெடித்தது ஏன்.. புதிய தகவல்
சென்னை: சென்னை தண்டையார்பேட்டையில் செயல்பட்டு வரும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு சொந்தமான ஆலையில் பாய்லர் டேங்க் வெடித்த விபத்து குறித்து புதிய தகவல்கள் கிடைத்தன.
தண்டையார்பேட்டை ஐஓசி நிறுவனத்தில் 5 எத்தனால் டேங்குகள் வைத்து சேமிக்கப்பட்டு வருகிறது. இவற்றை பெட்ரோல் பயன்பாட்டுக்காக சேமித்து வைத்திருக்கிறார்கள்.

இந்த அலுவலகத்தில் 500- க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களும் நிரந்தர தொழிலாளர்களும் பணியாற்றி வருகிறார்கள். இந்த நிறுவனத்தில் இருந்து பெட்ரோலியம். எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் டேங்கர் லாரிகள் மூலம் வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று இந்த நிறுவனத்தில் திடீரென எண்ணெய் கசிவு ஏற்பட்டு பாய்லர் பயங்கர சப்தத்துடன் வெடித்தது. இதையடுத்து ஊழியர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். தகவலறிந்த தீயணைப்புத் துறை, போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்தனர். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சரவணா, பெருமாள் ஆகியோர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் பெருமாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சரவணாவுக்கு மட்டும் சிகிச்சை தொடர்கிறது. இந்த நிலையில் இந்த விபத்து குறித்து புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. அதாவது இந்த ஆலையில் 5 எத்தனால் சேமிப்பு கிடங்குகள் உள்ளன. அவை தலா 70 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்டவை.
அவற்றில் 2 டேங்குகள் வெடித்து சிதறின. எத்தனாலை சேமிக்கும் குழாய் சேதம் ஏற்பட்டதை அடுத்து அதை சில தொழிலாளர்கள் வெல்டிங் செய்ய சென்றனர். அவர்கள் அங்கிருந்த வால்வை மூடிவிட்டு வெல்டிங் செய்தனர். அப்போது சூடு தாங்காமல் எத்தனால் தீப்பிடித்து எரிந்தது.
பொதுவாக இது போல் எளிதில் தீப்பிடிக்கும் எத்தனால் உள்ளிட்டவைகளின் குழாய்களை வெல்டிங் செய்யும் போது பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதாவது வெல்டிங் செய்த குழாயை குளிர்ச்சிபடுத்தி விட்டு பிறகுதான் வெல்டிங் செய்திருக்க வேண்டும் . எனவே வெல்டிங் செய்யும் போது எந்தவித பாதுகாப்பு நடவடிக்கைகளும் பின்பற்றப்படவில்லை.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications