சென்னை சென்ட்ரல் லாட்ஜில் குளிக்க போன நர்சு.. பின்னாடியே வந்த உருவம்.. ஆடிப்போன பெண்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை சென்ட்ரல் என்பது இந்தியாவின் பல்வேறு மாநில மக்கள், பல்வேறு மாவட்ட மக்கள் வந்து செல்லும் பகுதியாகும்.. ஏராளமான பயணிகள் அருகில் உள்ள விடுதிகளில் வாடகைக்கு எடுத்து தங்குவார்கள்.. அப்படி தங்கிய பெண் நர்சு ஒருவர், குளிக்க போயிருக்கிறார். அங்கு விடுதி ஊழியராக பயணியாற்றும் நபரால் நடந்த சம்பவம் ஆடிப்போக வைத்துள்ளது. அந்த விடுதி ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை சென்ட்ரலில் இந்தியாவின் மிக முக்கியமான ரயில் நிலையம் அமைந்துள்ளது. இங்கு பல ஆயிரம் பயணிகள் வந்து செல்கிறார்கள். அப்படி வரும் பயணிகள் மற்றும் சென்னையில் இருந்து ரயிலில் ஏறி செல்ல விரும்பும் பயணிகள் அருகில் உள்ள லாட்ஜகளில் அறை எடுத்து தங்குவது வழக்கம். அந்தவகையில் பலர் தினமும் பல்வேறு விடுதிகளில் வந்து தங்கி செல்கிறார்கள்.

A nurse who went to take a bath at a lodge near Chennai Central faced a twist

சென்ட்ரல் பகுதியில் உள்ள பிரபல விடுதியில் ஊழியராக 19 வயதாகும் தனஞ்செய்பதி என்பவர் வேலை செய்து வந்தார். ஒடிசா மாநிலத்தை சேர்ந்த இவர், அண்மையில் வேலைக்கு சேர்ந்தார். தனஞ்செய்பதியின் வேலை என்பது, வாடிக்கையாளர்கள் தங்குவதற்கு வரும்போது அறைகளை காட்டுவதும், வாடிக்கையாளர்கள் அறையை காலி செய்துவிட்டு போனபிறகு சுத்தப்படுத்துவதும் தான் வேலையாகும்.

இவர், விடுதியில் தங்க வரும் இளம்பெண்களின் அழகை ரசிப்பதோடு, அவர்கள் குளிக்கும் காட்சியை ஜன்னல் வழியாக செல்போன் மூலம் வீடியோ படம் எடுத்தும் இவர் ரசித்து வந்தாராம். இதை ஒரு பொழுதுபோக்காக செய்து வந்த இவர், போலீசில் மாட்டிக்கொண்டிருக்கிறார்.

அண்மையில் கேரள மாநிலத்தை சேர்ந்த நர்சு ஒருவர் இந்த விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளார். சென்னையை அடுத்த பெரியபாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் இவர் வேலை பார்த்து வந்தார். தனஞ்செய்பதி, ஜன்னல் வழியே செல்போனில் வீடியோ எடுப்பதை நர்சு பார்த்துவிட்டார். உடனடியாக கூச்சலிட்டார். பின்னர் ஆடைகளை அணிந்து கொண்டு வெளியில் வந்த நர்சு, தனஞ்செய்பதி செல்போனை பறித்து ஆய்வு செய்திருக்கிறார்.

ஆனால் தனஞ்செய்பதி அதற்குள் நர்சு குளிக்கும்போது எடுத்த ஆபாச படத்தை அகற்றிவிட்டதாக கூறப்படுகிறது. இருந்தாலும் அவரது செல்போனில் வேறு சில இளம்பெண்கள் குளிக்கும்போது எடுத்த காட்சிகள் பதிவாகி இருந்தன. அதன்அடிப்படையில், வேப்பேரி அனைத்து மகளிர் போலீசில் தனஞ்செய்பதி மீது புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். தனஞ்செய்பதியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+