தொடரும் விஷவாயு பலி.. ஆவடியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த தூய்மை பணியாளர் பலி.. விபரீதம்
சென்னை: ஆவடி அருகே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்றபோது விஷவாயு தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
கழிவு நீர் தொட்டி, பாதாள சாக்கடை போன்றவற்றை சுத்தம் செய்ய மனிதர்களை ஈடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், செலவு குறைவு என்கிற காரணத்தால் மனிதர்களை இப்பணியில் ஈடுபடுத்தும் நிலை நீடித்து வருகிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் உயிரிழப்புகள் கணிசமான அளவில் பதிவாகின்றன.

கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதம், அதற்கு முந்தைய 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் கழிவு நீர் தொட்டிகளை சுத்தம் செய்ய முயன்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை மத்திய அரசு வெளியிட்டிருந்தது. அதில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருந்தது. ஆனால் தற்போது முதல் இடத்திற்கு வந்திருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பல நகராட்சிகளில் பாதாள சாக்கடைகளை தூய்மை செய்வதற்கான இயந்திரங்கள் இல்லாததால் சில நேரங்களில் நகராட்சி ஊழியர்கள் கூட விஷவாயு தாக்கி உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. இந்த உயிரிழப்புகளின் தொடர்ச்சியாக திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே தனியார் குடியிருப்பு வளாகத்தில் மற்றொரு உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது.

குடியிருப்பு வளாகத்தில் உள்ள கழிவு நீர் தொட்டியை தூய்மை செய்ய, தொட்டியை திறந்த போது விஷவாயு தாக்கி சுரேஷ் என்ற தூய்மை பணியாளர் சம்பவ இடத்திலேயே மூச்சு திணறி உயிரிழந்துள்ளார். அதேபோல மற்றொரு பணியாளர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
கடந்த 3 மாதங்களுக்கு முன்னர், ஆவடியில் இதேபோல கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்றபோது 2 பேர் உயிரிழந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications