சென்னையில் விரைவில் "டிரைவர்" இல்லா மெட்ரோ ரயில்கள்.. ரூ.946 கோடியில் ஒப்பந்தம்.. செம பிளான்!
சென்னை : இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், 946 கோடியே 92 லட்சம் மதிப்பில், ஓட்டுநர் இல்லாத 26 ரயில்களை தயாரிக்க அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
சென்னையில் முதல்கட்ட மெட்ரோ ரயில் திட்டம் முடிந்து, இரண்டு வழித்தடங்களில் சுமார் 55 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதைத் தொடர்ந்து, இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், சுமார் 63,200 கோடி மதிப்பில் 118.9 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. மேலும், ஓட்டுநர் இல்லா முதல் மெட்ரோ ரயில், கடந்த 2024-ம் ஆண்டு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும்.

சென்னை: சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2-ம் கட்டமாக 3 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் பாதை மற்றும் ரெயில் நிலையங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த வழித்தடங்களில் வருகிற 2025-ம் ஆண்டு ஜூலை மாதம் ரெயில்களை இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் 3 பெட்டிகளைக் கொண்ட 26 மெட்ரோ ரயில்களை (மொத்தம் 78 பெட்டிகள்) தயாரிக்கும் ஒப்பந்தம் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. வடிவமைப்பு, உற்பத்தி, சோதனை, தரமான மெட்ரோ ரயில் இயக்குதலுக்கான தகுதி, பணியாளர்களுக்கு பயிற்சி, உதிரி பாகங்கள் வழங்கல் மற்றும் குறைபாடு பொறுப்பு போன்றவை இந்த ஒப்பந்தத்தில் அடங்கும்.
இந்த ஒப்பந்தப்படி, முதல் மெட்ரோ ரயில் 2024-ம் ஆண்டில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். இதைத் தொடர்ந்து, ஓட்டுநர் இல்லாத ரயில் இயக்கத்துக்கான சோதனைகள் நடத்தப்படும். இதன்பின்பு, மீதமுள்ள அனைத்து மெட்ரோ ரயில்களும் ஓர் ஆண்டுக்குள் பல்வேறு கட்டமாக மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். இந்த ஒப்பந்தத்துக்கான மொத்த கால அளவு 40 மாதங்கள் ஆகும்.
இதற்கான நிதியை தமிழக அரசு வழங்குகிறது. ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஓட்டுநர் இல்லா முதல் மெட்ரோ ரெயில் 2024-ம் ஆண்டு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும் என சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications