Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நிஜமான காதல் தான் நிலையான பாடல் தான்.. மீண்டும் சேரும் ஏஆர் ரஹ்மான் - சாய்ரா தம்பதி! பயங்கர ஹாப்பி.!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானின் மனைவி சாய்ரா பானு, அவரை பிரிவதாக கடந்த ஆண்டு அறிவித்திருந்தார். இதனை ஏ.ஆர்.ரகுமானும் உறுதி செய்த நிலையில் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் ஏஆர் ரஹ்மான் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தன்னை ரஹ்மானின் முன்னாள் மனைவி என அழைக்க வேண்டாம் என சாய்ரா பானு ஆடியோ வெளியிட்டு இருந்தார். தற்போது வரை இருவரும் சட்டபூர்வமாக விவாகரத்து கேட்காத நிலையில் அவர்கள் மீண்டும் இணையலாம் என கூறப்படுவதால் ஏஆர் ரகுமானின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கு முன்பு மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ரோஜா படத்தின் மூலம் தமிழ் தலைவர்களுக்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏஆர் ரகுமான். குறுகிய இடைவெளியில் மிகப் பெரிய புகழை பெற்ற அவர் 1995ஆம் ஆண்டு சாய்ரா பானுவை திருமணம் செய்து கொண்டார்.

entertainment AR Rahman Saira Banu

இந்த தம்பதியினருக்கு ரஹீமா, கதீஜா ஆகிய இரு மகள்களும், அமீன் என்ற மகனும் இருக்கிறார். இதில் இருவர் இசை உலகில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் திருமண பந்தத்தில் 30 ஆண்டை நெருங்கி வந்த நேரத்தில் தான் ஏஆர் ரகுமானை பிரிவதாக சாய்ரா பானு அறிவித்தார்.

இருவருக்கும் இடையே தீர்க்க முடியாத இடைவெளி உருவானதாகவும் இதனால் வேறு வழியின்றி ரஹ்மானை பிரிவதாக சாய்ரா பானு தெரிவித்தது திரையுலகம் மட்டுமல்லாது, ஏஆர் ரகுமானின் ரசிகர்களையும் கடும் அதிருப்தியில் ஆழ்த்தியது. காரணம் இதுவரை எந்தவிதமான சர்ச்சையிலும் சிக்காத ஏஆர் ரகுமானை சாய்ரா பானு பிரிவதாக அறிவித்தது பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விளக்கம் அளித்த ஏஆர் ரகுமான் தங்களது திருமண பந்தம் 30 ஆண்டுகளை எட்டும் என நம்பி இருந்தோம். ஆனால் எல்லாமே கண்ணுக்குத் தெரியாத முடிவாக சென்று விட்டது என உருக்கமாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

இந்த நிலையில் ஏஆர் ரகுமானின் விளக்கம் வெளியான சில மணி நேரங்களில் அவரது இசைக்குழுவில் பேஸ் கிட்டாரிஸ்டாக பணி புரியும் மோகினி டே என்பவரும் தனது கணவரை பிரிவதாக அறிவித்தார். இதை அடுத்து சமூக வலைதளங்களில் இருவரையும் இணைத்து கட்டுக் கதைகள் வெளியானது. ஏஆர் ரகுமான் மீது விமர்சனம் எழுந்த நிலையில் சாய்ரா பானு தனது கணவர் உலகத்திலேயே மிகச் சிறந்தவர் தங்கள் பிரிவுக்கும் ஏற்கனவே வெளியான கிசுகிசுகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை தனது உடல் நலம் பாதிக்கப்பட்டதால் ஏஆர் ரகுமானுக்கு மன உளைச்சல் தரக்கூடாது என்பதற்காகவே பிரிந்தேன் என விளக்கம் அளித்து இருந்தார்.

மேலும் தனது தந்தை குறித்து அவதூறு கருத்துக்களை பரப்ப வேண்டாம் என ஏஆர் ரகுமானின் மகனான அமீனும் கூறியிருந்தார். இதற்கிடையே ஏஆர் ரகுமான் சாய்ரா பானு தம்பதி மீண்டும் இணையலாம் எனவும் அமீன், ரஹீமா, கதீஜா ஆகியோர் எதிர் காலம் கருதி மீண்டும் இணைவார்கள் என கூறப்பட்டது. இந்த நிலையில் நேற்று திடீரென ஏஆர் ரகுமான் உடல்நலம் பாதிக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நெஞ்சு வலி காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறிய நிலையில் நீண்ட தூர பயணம் காரணமாக டீஹைட்ரேஷன் ஏற்பட்டதாகவும், தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது உடல்நிலை சீராக இருப்பதாக அவரது சகோதரி தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக நீண்ட நாட்களுக்கு பிறகு ஆடியோ வெளியிட்டு இருந்த சாய்ரா பானு தனது கணவர் உடல்நலம் பெற பிரார்த்திப்பதாகவும் அதே நேரத்தில் நாங்கள் இன்னும் விவாகரத்து பெறவில்லை எனவே ஏஆர் ரகுமானின் முன்னாள் மனைவி என அழைக்க வேண்டாம் எனக் கூறியிருந்தார்.

இதை அடுத்து ஏஆர் ரகுமானின் உடல்நல குறைவால் அதிர்ச்சி அடைந்த சாய்ரா பானு விரைவில் அவரை நேரில் சந்திப்பார் எனவும் கூறப்படுகிறது. மேலும் ஏற்கனவே சொன்னது போல அந்த தம்பதி மீண்டும் இணைவார்கள் என கூறப்படுவதால் ஏஆர் ரகுமானின் குடும்பத்தினரும் ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+