80 பெண்களை சூறை.. பலாத்கார வீடியோவை வைத்து மிரட்டி மிரட்டியே உறவு கொண்ட கயவன் கைது

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    80 பெண்களை சூறை, வீடியோவை வைத்து மிரட்டி உறவு கொண்ட கயவன் கைது- வீடியோ

    சென்னை: சென்னையில் பல்வேறு பகுதிகளில் தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து பலாத்காரம் செய்தவரை போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தார்.

    ஆவடி, அம்பத்தூர் பகுதிகளில் தொடர் கொள்ளை தொடர்பாக புகார்கள் வந்ததை அடுத்து காவல் துறையினர் பட்டறவாக்கம் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பைக்கில் வந்த ஒருவரை மடக்கி விசாரித்த போது அவரிடம் எந்த ஆவணங்களும் இல்லை.

    மேலும் அவரது பதில் முன்னுக்கு பின் முரணாக இருந்தை அடுத்து அவரது செல்போனை வாங்கி சோதனை செய்தனர். அதை பார்த்த போலீஸாருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. அதில் பல பெண்களை பலாத்காரம் செய்து அவற்றை வீடியோவாக எடுத்து வைத்துள்ளதும் தெரியவந்துள்ளது.

    சென்னைக்கு தப்பி வந்தவர்

    சென்னைக்கு தப்பி வந்தவர்

    இதையடுத்து அவரிடம் போலீஸார் விசாரித்தனர். அப்போது அவர் பரபரப்பு வாக்குமூலத்தை அளித்தார். அவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அறிவழகன் என்பது தெரியவந்தது. அவர் பெங்களூரில் மென்பொறியாளராக பணிபுரிந்து வந்த அவர் ஓசூரில் வீட்டில் தனியாக இருந்த பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு விட்டு அங்கிருந்து சென்னைக்கு தப்பி வந்துள்ளார்.

    பணம் பறித்தல்

    பணம் பறித்தல்

    கடந்த 2010-ஆம் ஆண்டு வேளச்சேரி, கிண்டி, சைதாப்பேட்டை ஆகிய பகுதிகளில் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை வேட்டையாடி அவற்றை வீடியோவாக எடுத்து வைத்துள்ளார். இது போல் சுமார் 80 பெண்களிடம் வீடியோவை காட்டி பணம், நகை ஆகியவற்றை பறிப்பதும் வாடிக்கையாக வைத்திருந்தார்.

    புகார் இல்லை

    புகார் இல்லை

    இந்நிலையில் பணம், நகை திருட்டு வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார். எனினும் பாலியல் வழக்கு தொடர்பாக யாரும் புகார் கொடுக்கவில்லை. ஏதோ ஒரு பெண் கொடுத்த புகாரையும் போலீஸார் அலட்சியம் காட்டியதால் அறிவழகன் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

    நோட்டமிட்ட நபர்

    நோட்டமிட்ட நபர்

    இதைத் தொடர்ந்து ஒரு பைக்கை திருடிக் கொண்டு அம்பத்தூர், கொரட்டூர், அம்பத்தூர் எஸ்டேட் பகுதிகளில் உள்ள வீடுகளில் தனியாக இருக்கும் பெண்கள் குறித்து நோட்டமிடுவார். பின்னர் குறிப்பிட்ட வீடுகளில் போய் கதவை தட்டிவிட்டு மறைந்து கொள்வார். வீட்டிலுள்ள அந்த பெண் கதவை திறந்துவிட்டு யாரும் காணாதது குறித்து யோசிக்கும் போது அசுர வேகத்தில் உள்ளே நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோவாக எடுத்து வைப்பார்.

    20 பெண்களின் வாழ்க்கை சூனியம்

    20 பெண்களின் வாழ்க்கை சூனியம்

    பின்னர் அந்த வீடியோவை காட்டி அதே பெண்களை கணவர் இருக்கும்போதே உறவு கொண்டுள்ளார். கடந்த 3 மாதங்களில் மட்டும் 20 பெண்களின் வாழ்க்கையை சூறையாடியுள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீஸார் அறிவழகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+