Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மலை பகுதிகளில் வீட்டு மனை வாங்கியவர்களுக்கு அரசு தரும் சூப்பர் வாய்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி உள்பட தமிழ்நாட்டின் மலைப்பகுதிகளில் உள்ள அங்கீகரிக்கப்படாத மனைகள், மனைப்பிரிவுகள் வரன்முறைக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் 30.11.2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க ஆர்வம் உள்ளவர்கள் தங்கள் விண்ணப்பங்களை www.tnlayouthillareareg.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு நகர் ஊரமைப்பு இயக்குனர் பா.கணேசன் அறிவித்துள்ளார்.

நகர் ஊரமைப்பு இயக்குனர் பா.கணேசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "மலையிடப்பகுதிகளில் 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் பகுதியாகவோ அல்லது முழு எண்ணிக்கையிலான மனைகள் விற்கப்பட்ட அங்கீகரிக்கப்படாத மனைகள் மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்துவதற்கு வசதியாக, அரசு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அரசாணை எண்.66, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, நாள்.30.3.2020-ல் விதி திருத்தத்தை வெளியிட்டுள்ளது.

A super opportunity to those who have bought houses in hilly areas including Ooty and Kodaikanal

இதன்படி, பொதுமக்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க மேலும் வாய்ப்பை வழங்கி விண்ணப்பங்களுக்கான கால வரம்பை 30.11.2025 வரை நீட்டித்து வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க ஆர்வம் உள்ளவர்கள் தங்கள் விண்ணப்பங்களை www.tnlayouthillareareg.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இதன்மூலம், மலையிடப்பகுதிகளில் அங்கீகரிக்கப்படாத மனைகள் மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த பொதுமக்கள் இந்த வாய்ப்பினை தவறாது பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியாது

அதேநேரம் நீர்நிலைகள் மீது (வாய்க்கால், தொட்டி, ஏரி, குளம், ஆறு) ஆகியவற்றின் மீது அமைக்கப்பட்ட மனைப்பிரிவுகள், அரசு புறம்போக்கு நிலத்தின் மீது அமையப்பட்டுள்ள மனைப்பிரிவுகள், திறந்த வெளி ஒதுக்கீடு இடங்கள் (Open space reservation(OSR), பூங்கா, விளையாடுமிடங்கள் அமையப்பெற்ற மனைப்பிரிவுகள், அனுமதி பெறப்பட்ட மனைப்பிரிவில் திறந்த வெளி ஒதுக்கீடு இடங்கள், பூங்கா, விளையாடுமிடங்கள் ஒதுக்கீடுகளில் பிரிக்கப்பட்ட மனைகள், அடுத்த நிலத்திற்கு வழியாக அமையும் காலிமனை (Vacant Plot), உத்தேச சாலை மீது அமையப்பெற்ற மனைகள், rail corridors (ம) தெருக்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் அமையும் மனைகள், பொதுப்பாதை (ம) தெருக்களை ஆக்கிரமிப்பு செய்து பிரிக்கப்பட்ட மனைகள், நில உச்ச வரம்பு சட்டம் 1978 பிரிவு 24-ன் படி உள்ள மனையிடம், அதிக உயர் அழுத்தம் மின் பாதைக்கு கீழ் பிரிக்கப்பட்ட மனைகள் ஆகிய மனை பிரிவில் மனை வாங்கியவர்கள் விண்ணப்பிக்க முடியாது. அவர்கள் விண்ணப்பித்தாலும் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+