Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை பிராட்வேயில் செல்போனை எடுத்தவருக்கு அடித்த அதிர்ஷ்டம்.. கடைசியில் வீடு தேடி வந்த போலீஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை பிராட்வேயில் செல்போனை தவறவிட்ட முதியவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவரது செல்போனை எடுத்த இளைஞர், அதன் மூலம் சுமார் 6 லட்சம் ரூபாய்க்கு செல்போன் வாங்கி உள்ளார். அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நமது செல்போன் மிக முக்கியமான ஒன்று, அதை மட்டும் தவறவிட்டால் உடனே நம்பரை பிளாக் செய்ய வேண்டும். அதேபோல் செல்போனில் உள்ள ஐஎம்எஐ நம்பரை முன்னரே நோட் பண்ணி வைத்துக்கொள்ள வேண்டும். அதை வைத்து காவல்துறையில் புகார் அளித்தால் உங்கள் செல்போன் எங்கிருந்தாலும் கண்டுபிடித்துவிட முடியும். செல்போனில் கண்டிப்பாக பாஸ்வேர்டு போட வேண்டும்.

A teenager bought a cell phone for Rs 6 lakh using an old mans lost cell phone in Chennai

செல்போனில் லாக்போட்டிருந்தால் அதை அழிக்க அவர்களுக்கு குறைந்தது சில மணிநேரமாகவது ஆகும். எனவே அதற்குள் நீங்கள் செல்போன் நம்பரை பிளாக் செய்துவிடலாம். ஏனெனில் உங்கள் செல்போனை வைத்து உங்கள் வங்கி கணக்கில் உள்ள மொத்த பணத்தையும் யார் வேண்டுமானாலும் எடுக்க முடியும். அதை கண்டுபிடித்துவிட முடியும் என்றாலும், திருடியவர்களிடம் இருந்து பணத்தை வாங்குவது அவ்வளவு எளிதானது அல்ல.

எனவே செல்போன் தொலைந்தால் உடனே சிம்மை பிளாக் செய்யுங்கள். அதேபோல் செல்போன் தொலைந்தது குறித்து உடனே பிளாக் செய்யுங்கள். மேலும் வங்கி கணக்கு பாஸ்வேர்டுகளை செல்போனில் சேமித்து வைத்திருந்தால், உங்கள் இணையதள வங்கி பாஸ்வேர்டை உடனே மாற்றுங்கள். உங்கள் இமெயில் பாஸ்வேர்டுகளையும் மாற்றுங்கள். இல்லாவிட்டால் பெரிய அளவில் உங்களிடம் பணம் பறித்துவிடும். சென்னை பிராட்வேயில் செல்போனை தவறவிட்ட முதியவர் , அந்த செல்போனால் 6 லட்சத்தை பறிகொடுத்துள்ளார்.

A teenager bought a cell phone for Rs 6 lakh using an old mans lost cell phone in Chennai

சென்னை பிராட்வே, தையப்பன் தெருவைச் சேர்ந்தவர் தியோடோரே என்பவருக்கு 66 வயது ஆகிறது. இவர், கடந்த 19 -ந்தேதி ஆட்டோவில் மண்ணடியில் இருந்து வீட்டுக்கு வந்திருக்கிறார். அப்போது அவர் தனது செல்போனை தவறவிட்டார். இந்த நிலையில் முதியவர் தியோடோரே தனது வங்கி கணக்கை பரிசோதித்த போது 5 தவணையாக ரூ.6 லட்சத்து, 4,644 எடுக்கப்பட்டு இருந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த தியோடோரே இது குறித்து முத்தியால்பேட்டை போலீசில் புகார் அளித்தார். போலீசார் சைபர் கிரைம் உதவியுடன் குற்றவாளியை கண்டுபிடித்தனர்.

விசாரணையில் முதியவர் தவற விட்ட செல்போன் பிராட்வே காக்கா தோப்பைச் சேர்ந்த நூருதீன் (29) என்பவர் எடுத்திருந்தது தெரியவந்தது. பின்னர் அந்த செல்போனை பயன்படுத்தி, முதியவரின் வங்கி கணக்கில் இருந்து ஆன்லைன் மூலம் பணத்தை எடுத்து அதன் மூலம் 5 விலை உயர்ந்த செல்போன்கள் வங்கியதும் தெரியவந்தது . இதையடுத்து நூருதீனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+