Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடடே.. சபாஷ் போட வைத்த சென்னை போலீஸ்.. பஸ்ஸில் போற மாணவர்களா.. உடனே பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை போலீசாருக்கு பெரும் சவாலான விஷயமாக இருப்பது பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் அடவாடி செயல்கள் தான். கெத்துகாட்டுவதாக நினைத்து பேருந்துகளில், புறநகர் ரயில்களில் புட்போர்ட் அடித்தபடி அவர்கள் செய்யும் சேட்டையை எப்படி தடுப்பது என்பது போலீசாருக்கு பெரும் சவாலாக உள்ளது. இதுகுறித்து விழிப்புணர்வு வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளனர்.

சென்னை போக்குவரத்து போலீசாருக்கும் சரி, சென்னை சட்டம் ஒழுங்கு போலீசாருக்கும் சரி.. சவலான விஷயம் என்றால், மாணவர்களின் அடாவடி செயல்கள் தான். பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் வயசு கோளாறிலும், ஆர்வக்கோளாறிலும், கெத்து காட்டுவதாக நினைத்து பல சேட்டைகளை செய்கிறார்கள்.

A video released by the police on how students should be when riding the bus in Chennai

குறிப்பாக பேருந்துகளிலும், புறநகர் ரயில்களிலும் அவர்களின் சேட்டை உச்சகட்டமாக இருக்கிறது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் என்பதால் அவர்களின் எதிர்காலம் எந்த வகையிலும் காவல் துறையின் நடவடிக்கையால் பாதிக்கப்படக்கூடாது என்று காவலர்கள் நினைக்கிறார்கள். அதனால் பல நேரங்களில் மிக பொறுமையாக சிக்கலான விஷயங்களை கையாளுகிறார்கள்.

பேருந்துகளில் புட்போர்ட் அடிப்பது, ரயில்களில் தொங்கியபடி தரையை தேய்த்தபடி செல்வது இதெல்லாம் சென்னையில் தினசரி காட்சிகள். பேருந்துகளில் ரூட்டுதல பாணி இன்னமும் முடியாமல் தொடர்கிறது. பேருந்துகளில் இருவேறு கல்லூரி மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் தனித்தனி குழுவாக இயங்கி அலப்பறை செய்கிறார்கள். அவர்களின் செயல்கள் பொதுமக்களுக்கும் பல நேரங்களில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

A video released by the police on how students should be when riding the bus in Chennai

பேருந்துகளில் தாலம் போட்டப்படி, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று மாணவர்கள் வருவார்கள். பிரச்சனை அதில் இல்லை., அவர்கள் உயிருக்கு ஆபத்தான முறையில் பேருந்துகளில் பயணிப்பது தான். அந்த பயணம் இனிமையாகவும், சாகசமாகவும் இருப்பதாக நினைக்கிறார்கள். தங்களை பார்த்து பலர் வாயை பிளக்க வேண்டும் என்ற ஆசையில் அவர்கள் செய்யும் சாகசங்கள் அவர்களின் உயிரையே பறித்துள்ளது.

பேருந்துகளில் இப்படி என்றால், இருசக்கர வாகனங்களில் செல்லும் போது ரேஸ் வைத்து செல்கிறார்கள். எதிலும் ஒரு சாகசம், எதிலும் ஒரு திரில், மாணவிகள் முன் கெத்து காட்டுவதற்காக சில செயல்கள் என மாணவர்களின் பாதையே சாகத்தை நோக்கி இருக்கிறது. இந்த பைக் சாகசங்கள் பலரது உயிரை பறித்துள்ளது. இதனை தடுக்க காவல்துறையினர் பல முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். அந்த வகையில் சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் தங்களது ட்விட்டர் பக்கத்தில், மாணவர் ஒருவர் பாடும் கானா பாடலை வெளியிட்டுள்ளனர்.

அந்த பாடலில் மாணவர் கூறுகையில், பள்ளிக்கூடம் போகனும்னு பஸ்ஸில் ஏறி போறீங்க... புட் போர்டு அடிச்சுக்கிட்டே கீழ விழுந்து வாருறீங்க.. மறந்துட்டு பண்ணுறீங்க, கியாரண்டிஇல்லை லைபுக்கு.. ரோடுன்னு தெரிஞ்சுகிட்டே சாகசத்தை பண்றீங்க.. குடும்பத்தை நினைக்காமல் சாவை தேடி போறீங்க..ஃபுட் போர்டு கத்தி, அது டேஞ்சரான கத்தி, அப்போ அப்போ தான் தெரியும் , அப்பா கஷ்டம் பத்தி
போலீஸ் சொல்லுற அறிவுரையை கேட்கணும் கேட்கவில்லை என்றால் நம்ம உயிரை ஆம்புலன்ஸ் தான் காக்கணும். " என்று பாடல் இருக்கிறது. இந்த பாடல் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தும் என பலரும் பாராட்டி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+