Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை எழும்பூரில் பிரபல தியேட்டர் பாத்ரூம், சீட்டை பார்த்து அரண்டு போன பெண்.. எம்எல்ஏ செய்த காரியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை எழும்பூரில் உள்ள பிரபல தனியார் திரையரங்கில் நடிகர் விஜய் நடித்துள்ள தி கோட் திரைப்படம் வெளியாகி உள்ளது. இந்த திரையரங்கில் உள்ள பாத்ரூம் மிகவும் மோசமாக நாற்றம் அடித்துள்ளது.. சீட்டெல்லாம் மூட்டை பூச்சி இருந்ததாம். இதில் நீங்கள் 3 மணி நேரம் உக்காருவீங்களா என்று படம் பார்க்க வந்த பெண் ஆவேசமாக கேள்வி எழுப்பினார். இதுபற்றி எழும்பூர் எம்எல்ஏவும் போலீசில் புகார் அளித்துள்ளார்.

நடிகர் விஜய் நடிப்பில் தி கோட் திரைப்படம் கடந்த செப்டம்பர் 5ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. இந்த படம் ஒரு வாரமாக பல திரையங்குகளில் ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. கடந்த சில மாதங்களில் விஜய்யின் கோட் திரைப்படத்தைத்தான் குடும்பம் குடும்பமாக மக்கள் தியேட்டரில் போய் படம் பார்த்து வருகிறார்கள். சென்னையில் பலரும் தி கோட் திரைப்படத்தை கடந்த வாரத்தில் பார்த்து ரசித்துள்ளனர்.

chennai

சென்னையின் எல்லா திரையரங்கிலும் தி கோட் திரைப்படம் வெளியாகி உள்ளது.. சென்னையை பொறுத்தவரை பெரும்பாலான திரையரங்குகள் அதிநவீன தரத்திற்கு மாறிவிட்டன. திரையரங்குகள் எல்லாமே நவீன டிஜிட்டல் வசதி மற்றும் ஏசி வசதி, உலகத்தரமான சீட் வசதிகளுடன் மாறிவிட்டன. அதேநேரம் சில திரையரங்குகள் இன்னும் மாறவில்லை.. அந்த வகையில் சென்னை எழும்பூரில் உள்ள பிரபல தனியார் திரையங்கு ஒன்று சுத்தம் இல்லாத காரணத்தால் அவப்பெயரை சந்தித்துள்ளது. அங்கு தி கோட் திரைப்படத்தை காண வந்த பெண் ஒருவர், தியேட்டர் மேலாளரிடம் வாக்குவாதம் செய்த காட்சி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.

அதில், அந்த பெண் கூறுகையில். இந்த தியேட்டரில் விஜய்யின் தி கோட் திரைப்படத்தை காண 225 ரூபாய் கட்டணமாக வாங்குகிறார்கள். ஆனால் நான் 225 ரூபாய் கட்டணம் செலுத்தி போய், உள்ளே அமர சென்றால், சீட்டுகள் எல்லாம் உடைந்து சேதமாக உள்ளது. தியேட்டர்களில் உள்ள கழிவறை மிகவும் அசுத்தமாக உள்ளது. மோசமான நாற்றம் அடிக்கிறது. தியேட்டரை பராமரிப்பவர்கள் அதனை சுத்தம் கூட செய்யவில்லை. அதனை புதுப்பிக்கவே இல்லை. சீட்டுகளில் எல்லாம் மூட்டை பூச்சி இருக்கிறது. இவர்களை போன்ற ஆட்களையெல்லாம் நுகர்வோர் நீதிமன்றத்திற்கு இழுக்க வேண்டும். ஒரு ஷோ முடிந்த உடன் பெருக்காமல் ஆட்டு மந்தை போல் கூட்டமாக மக்களை தியேட்டருக்குள் அனுப்புகிறார்கள்.

கழிவறையில் சிறுநீர் நாற்றம் அடிக்கிறது., பாக்கு போட்டு எச்சில் துப்பி இருக்கிறார்கள். குழந்தைகள் இதை கண்டு அருவருக்கும் உணர்வு ஏற்படுகிறது. எல்லாருமே இங்கு காசு கொடுத்துதான் படம் பார்க்க வருகிறார்கள். ஒரு தியேட்டர் எப்படி இருக்க வேண்டும் என்பதுக்கு உதாரணமாக பல தியேட்டர் இருக்கிறது. ஆனால் எழும்பூர் தியேட்டர் சுத்தம் இல்லாமல் இருக்கிறது.. ஏசி சுத்தமாக இல்லை. தியேட்டர் ஓனரை கூப்பிடுங்கள் என்று கூறிளேன். ஆனால் அவர்கள் என்னை தயவு செய்து பணத்தை வாங்கிவிட்டு செல்லுங்கள் என கெஞ்சுகிறார்கள்" என்று ஆவேசமாக கூறினார். இந்த விவகாரம் தொடர்பாக எழும்பூர் எம்எல்ஏ பரந்தாமன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+