ஆதார் கார்ட் அப்டேட்.. செப்டம்பர் 30 வரை கால அவகாசம்.. மிஸ் பண்ணிடாதீங்க.. முமு விபரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆதார் கார்டினை அப்டேட் செய்வதற்கு செப்டம்பர் 14ஆம் தேதி வரை மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது செப்டம்பர் 30 வரை கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்ட் மிக முக்கிய ஆவணமாக இருந்து வருகிறது. மேலும், மோசடிகளில் இருந்து தப்பிப்பதற்கு கட்டாயமாக பொதுமக்கள் அவ்வப்போது ஆதார் கார்டினை அப்டேட் செய்திருக்க வேண்டும்.

Aadhaar card free update online date extend till 30th September

குறைந்தது 10 ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது குடிமக்கள் புகைப்படம், முகவரி, மொபைல் எண் ஆகியவற்றை அப்டேட் செய்யும்படி அறிவுறுத்தப்படுகிறது. அதன்படி, ஆதார் கார்டினை புதுப்பிப்பதற்கு கடந்த ஜூன் 11ம் தேதி வரையிலும் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

ஆனால், பலரும் தற்போது வரையிலும் ஆதாரினை அப்டேட் செய்யாமல் பயன்படுத்தி வரும் நிலையில் செப்டம்பர் 14ஆம் தேதி வரையிலும் கால அவகாசம் அளிக்கப்பட்டது. இந்த கால அவகாசம் செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆதார் கார்டினை எப்படி அப்டேட் செய்வது என்பதை விபரமாக பார்க்கலாம்:

முதலில், UIDAIன் https://myaadhaar.uidai.gov.in/என்கிற இணையதள பக்கத்திற்கு சென்று மை ஆதார் என்கிற பக்கத்தை தேர்வு செய்யவும். பின்னர், உங்கள் ஆதாரை புதுப்பிக்கவும் என்பதை தேர்ந்தெடுக்கவும்.

இதன் பின்னர், உங்களது மொபைல் எண்ணிற்கு வந்துள்ள ஓடிபி எண்ணை பதிவு செய்யவும். பின்னர், புதுப்பிப்பு புள்ளி விவரங்கள் தரவு என்பதை கிளிக் செய்து தேவையான மாற்றத்தை செய்துகொள்ளலாம். இதன் பின்னர், URN எண்ணை பயன்படுத்தி ஆதார் அப்டேட்டின் நிலையை அறிந்துகொள்ளலாம்.

ஆதார் கார்டில் புதிய போட்டோ, முகவரி மாற்றம், மொபைல் எண் மாற்றம் போன்ற அப்டேட்களை செய்ய நினைப்பவர்கள் தற்போது வழங்கப்பட்டுள்ள கால அவகாசத்தை பயன்படுத்திக்கொள்வது நல்லது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+