ஆதார் கார்டு + நிலப்பட்டா.. வருவாய்த்துறை திடீர்னு சொன்ன அறிவிப்பு.. இனிமேல் இப்படித்தானாம்.. சபாஷ்
சென்னை: பட்டா உள்ளிட்ட நில ஆவணங்கள் குறித்து வருவாய்த் துறை முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது.. தொடர்ந்து நடந்துவரும் முறைகேடுகளை தடுக்க, இந்த முடிவினை தமிழக அரசு எடுத்திருக்கிறது.
தற்போது பத்திரப்பதிவு துறையே ஆன்லைன் மயமாகிவிட்டது. அந்தவகையில், நாடு முழுவதும் நில ஆவணங்களை டிஜிட்டல் முறைக்கு மாற்றவும், ஆதார், பான் உள்ளிட்ட தகவல்களை அதனுடன் இணைக்கவும், மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அந்தவகையில், தமிழகத்திலும், நில ஆவணங்களை டிஜிட்டல் முறைக்கு மாற்றுவதற்கான பணிகள் படிப்படியாக நடந்து வருகிறது.

பட்டா வரைபடம்: குறிப்பாக, பட்டா, நில வரைபடம் உள்ளிட்ட ஆவணங்களை ஆன்லைன் வாயிலாக வழங்கும் பணி செயல்பாட்டில் உள்ள நிலையில், பட்டா உள்ளிட்ட நில ஆவணங்களில் உரிமையாளரின் ஆதார் எண்ணை இணைப்பதற்கு நில அளவை மற்றும் வருவாய்த் துறை தற்போது முடிவு செய்துள்ளது.
மோசடிகள்: இதற்கு காரணம், நிலஅபகரிப்பு மோசடிகள் ஆங்காங்கே நிறைய நடந்துவருவதால், இவைகளை களைய வேண்டியது அரசின் கடமையாக உள்ளது. அதிலும், வெறும் ஆவணங்களை மட்டுமே வைத்துக்கொண்டு ஆள்மாறாட்டம் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவது, ஒருவருக்கு சொந்தமான நிலத்தில், போலி ஆவணங்களை வைத்து, சட்டப்பூர்வ நில உரிமையாளராகிவிடுவது போன்றவைகள் நடக்க வாய்ப்புள்ளது.
அதனால்தான், பட்டாவில் இடம்பெறும் விவரங்களில் உரிமையாளரின் அடையாளத்தை உறுதி செய்ய போதுமான ஆவணங்கள் இல்லை என்பதால் பட்டா உள்ளிட்ட ஆவணங்களில் ஆதார் நம்பரை இணைக்க வேண்டிய அவசியம் இன்று ஏற்பட்டுள்ளது.
பட்டா + ஆதார்: இப்படி பட்டாவில் ஆதாரை இணைப்பதால், ஒருவர் பெயரில் எத்தனை சொத்துகள் உள்ளன? என்பதை தெரிந்து கொள்ள முடியும்.. நில அபகரிப்பு போன்ற குற்றங்களையும் இதன்மூலம் தடுக்க முடியும் என்பதாலேயே பொதுமக்களின் நன்மை கருதி அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் சொல்லும்போது, கணினி மயமாக்கப்பட்ட நில ஆவணத்துடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், உண்மையான உரிமையாளர்கள் மட்டுமே பரிவர்த்தனைகளை மேற்கொள்வதை உறுதி செய்யவும் முடியும்.
புதிய உத்தரவு: அத்துடன், உண்மையான உரிமையாளர்கள் மட்டுமே பத்திரப்பதிவு பரிவர்த்தனைகளை மேற்கொள்வதை உறுதி செய்ய முடியும். மாநில அரசின் இந்த முன்மொழிவுக்கு ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஒப்புதல் அளித்த நிலையில், தமிழக அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது" என்றனர்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications