ஆதார் கார்டு + நிலப்பட்டா.. வருவாய்த்துறை திடீர்னு சொன்ன அறிவிப்பு.. இனிமேல் இப்படித்தானாம்.. சபாஷ்
சென்னை: பட்டா உள்ளிட்ட நில ஆவணங்கள் குறித்து வருவாய்த் துறை முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது.. தொடர்ந்து நடந்துவரும் முறைகேடுகளை தடுக்க, இந்த முடிவினை தமிழக அரசு எடுத்திருக்கிறது.
தற்போது பத்திரப்பதிவு துறையே ஆன்லைன் மயமாகிவிட்டது. அந்தவகையில், நாடு முழுவதும் நில ஆவணங்களை டிஜிட்டல் முறைக்கு மாற்றவும், ஆதார், பான் உள்ளிட்ட தகவல்களை அதனுடன் இணைக்கவும், மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அந்தவகையில், தமிழகத்திலும், நில ஆவணங்களை டிஜிட்டல் முறைக்கு மாற்றுவதற்கான பணிகள் படிப்படியாக நடந்து வருகிறது.

பட்டா வரைபடம்: குறிப்பாக, பட்டா, நில வரைபடம் உள்ளிட்ட ஆவணங்களை ஆன்லைன் வாயிலாக வழங்கும் பணி செயல்பாட்டில் உள்ள நிலையில், பட்டா உள்ளிட்ட நில ஆவணங்களில் உரிமையாளரின் ஆதார் எண்ணை இணைப்பதற்கு நில அளவை மற்றும் வருவாய்த் துறை தற்போது முடிவு செய்துள்ளது.
மோசடிகள்: இதற்கு காரணம், நிலஅபகரிப்பு மோசடிகள் ஆங்காங்கே நிறைய நடந்துவருவதால், இவைகளை களைய வேண்டியது அரசின் கடமையாக உள்ளது. அதிலும், வெறும் ஆவணங்களை மட்டுமே வைத்துக்கொண்டு ஆள்மாறாட்டம் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவது, ஒருவருக்கு சொந்தமான நிலத்தில், போலி ஆவணங்களை வைத்து, சட்டப்பூர்வ நில உரிமையாளராகிவிடுவது போன்றவைகள் நடக்க வாய்ப்புள்ளது.
அதனால்தான், பட்டாவில் இடம்பெறும் விவரங்களில் உரிமையாளரின் அடையாளத்தை உறுதி செய்ய போதுமான ஆவணங்கள் இல்லை என்பதால் பட்டா உள்ளிட்ட ஆவணங்களில் ஆதார் நம்பரை இணைக்க வேண்டிய அவசியம் இன்று ஏற்பட்டுள்ளது.
பட்டா + ஆதார்: இப்படி பட்டாவில் ஆதாரை இணைப்பதால், ஒருவர் பெயரில் எத்தனை சொத்துகள் உள்ளன? என்பதை தெரிந்து கொள்ள முடியும்.. நில அபகரிப்பு போன்ற குற்றங்களையும் இதன்மூலம் தடுக்க முடியும் என்பதாலேயே பொதுமக்களின் நன்மை கருதி அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் சொல்லும்போது, கணினி மயமாக்கப்பட்ட நில ஆவணத்துடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், உண்மையான உரிமையாளர்கள் மட்டுமே பரிவர்த்தனைகளை மேற்கொள்வதை உறுதி செய்யவும் முடியும்.
புதிய உத்தரவு: அத்துடன், உண்மையான உரிமையாளர்கள் மட்டுமே பத்திரப்பதிவு பரிவர்த்தனைகளை மேற்கொள்வதை உறுதி செய்ய முடியும். மாநில அரசின் இந்த முன்மொழிவுக்கு ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஒப்புதல் அளித்த நிலையில், தமிழக அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது" என்றனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications