ஆதார் கார்டு நம்பரே ஆதாரம்.. தமிழக அரசு அறிவிப்பு.. "இது" இருந்தால்தான் நலத்திட்ட உதவிகளை பெறமுடியும்
சென்னை: மகளிர் உரிமைத்தொகையை பெற வேண்டுமானால் ஆதார் அட்டை மிகவும் அவசியம்.. இந்நிலையில், தமிழக அரசு சார்பில் ஒரு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ஆதார் கார்டு என்பது வெறும் அட்டை இல்லை.. அது ஒவ்வொருவரின் அடையாளம் ஆகும்.. இந்த ஆதார் கார்டு இருந்தால்தான், நம்மால் எந்த ஒரு செயலையுமே செய்ய முடியும்..
தனிநபரின் பெயர், போட்டோ, பிறந்ததேதி, செல்போன் நம்பர், வீட்டு அட்ரஸ், இமெயில் அட்ரஸ், பயோமெட்ரிக், இப்படி பல்வேறு விவரங்கள் அந்த கார்டில் பதிவு செய்யப்பட்டிருக்கும்.

நலத்திட்டங்கள்: இந்தியாவில் வசிப்பவர்களுக்கு மட்டுமே இந்த கார்டு வழங்கப்படும்... ஆதார் நம்பர் இருந்தால்தான், கேஸ் சிலிண்டர் மானியம் பெறுவது உள்ளிட்ட அரசின் பல்வேறு மானியங்கள் மற்றும் நலத்திட்டங்களையும், சேவைகளையும் பெற முடியும்..
கைக்குழந்தைகள் உட்பட எந்த ஒரு வயதினரும் ஆதார் அட்டை பெறலாம். குழந்தைகள் 5 வயதை எட்டிவிட்டால், அவர்களின் பயோமெட்ரிக் தகவல்கள் பதிவு செய்யப்பட வேண்டும். அப்படிச் செய்யாமல் போனால், பால பருவத்தில் செய்யப்பட்ட ஆதார் அட்டை செல்லாமல் போய்விடும். அதேபோல, கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது கண் பார்வையை முழுவதுமாகவோ அல்லது ஒரு பகுதியையோ இழந்தவர்கள் கூட, ஆதார் கார்டை பெற பதிவு செய்ய முடியும்.
போட்டோ: குடும்பத்தில் யாராவது ஒருவருக்கு உரிய சான்று ஆவணங்கள் இல்லாவிட்டாலும் கூட ஆதாருக்குப் பதியலாம். இந்த ஆதார் கார்டில் உங்கள் போட்டோ பிடிக்கவில்லையானால் மாற்றிக் கொள்ளலாம்.. திருத்தம் ஏதாவது செய்ய வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். ஆதார் கார்டு தொலைந்து போய்விட்டால், அதை மறுபடியும் மீட்டுக் கொள்ளலாம். இப்படி ஏகப்பட்ட வசதிகளை ஆன்லைனிலேயே நாம் செய்து கொள்ளும் வகையில் வசதி செய்துதரப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின், நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு, பயனாளிகளுக்கு ஆதார் நம்பர் மிகவும் அவசியம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஆதார் கார்டு: இந்த துறை சார்பில் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களை பெறவும், குழந்தை முதல் பெரியவர் வரை, அனைவருக்கும் ஆதார் எண் அவசியம். என்றும், ஆதார் எண் இல்லாத பயனாளிகள் விண்ணப்பித்து, அதற்கான சான்றிதழை அளிக்க வேண்டும் என்றும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன், ஆதார் எண் வரும் வரை, வங்கி அல்லது தபால் அலுவலக கணக்கு புத்தகம், பான் கார்டு, பாஸ்போர்ட், ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட 10 ஆவணங்களை, அடையாள சான்றாக அளிக்கலாம் என்றும் அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications