Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாட்டின் முதலாவது புல்லட் ரயில்.. 280 கிமீ வேகத்தில் வருகிறது.. AC ரயிலில் சென்னை ஐசிஎப் அசத்தல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாட்டிலேயே முதல் முறையாக மணிக்கு, 280 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடிய அதிவேக புல்லட் ரயிலை, சென்னை ஐசிஎப் தயாரிக்க உள்ளது.. பிஇஎம்எல்-உடன் இணைந்து இந்த ரயிலை தயாரிக்க உள்ள நிலையில், மிக முக்கிய தகவல் ஒன்றை ஐசிஎப் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது ரயில் பயணிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.

உலகளவில், அளவிலேயே, ரயில் பெட்டிகள் தயாரிப்பில் மிக முக்கியமான தொழிற்சாலையாக, சென்னையின் ஐசிஎஃப் விளங்கி கொண்டிருக்கிறது.. இந்த ஐசிஎப்பில் 500க்கும் மேற்பட்ட வடிவமைப்புகளில், 75,000க்கும் அதிகமான ரயில் பெட்டிகள் தயாராகி ஓடிக் கொண்டிருக்கின்றன.

chennai icf bullet train ac coach

மக்களிடம் பிரபலமாகியிருக்கும் பாரத் ரயில்களின் தயாரிப்புகளும் இங்குதான் இந்த ஐசிஎப்பில்தான் நடக்கிறது.. 60க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இதுவரை ஐசிஎப்-பில் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஐசிஎப் அடுத்தடுத்த அதிரடி: வந்தே பாரத் தவிர, சாதாரண பெட்டிகளை கொண்ட "வந்தே சதரன்" ரயில் பெட்டிகள், ஐசிஎப்யில் நடந்து வருகிறது. வந்தே மெட்ரோ ரயில்களும், இங்குதான் நடந்து கொண்டிருக்கின்றன... அம்ரித் வந்தே மெட்ரோ ரயில்களின் பணிகளும் இங்குதான் நடைபெற்று வருகின்றன. வந்தே பாரத் ரயில் பெட்டிகள், எல்எச்பி பெட்டிகள், மெமு ரயில் பெட்டிகள் போன்றவைகளும் இதே ஐபிஎப்பில்தான் தயாரிக்க போகிறார்கள்.

இவைகளை தவிர, படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்களும் இங்குதான் தயாரிக்க முடிவு செய்யப்பட்டு, அந்த படுக்கை வசதியுள்ள, வந்தே பாரத் ரயில் தயாரிப்பு பணிகளும் நிறைவடைந்துவிட்டன.

அதிவேக புல்லட் ரயில்: இப்படிப்பட்ட சூழலில், அடுத்த மகிழ்ச்சியை ஐசிஎப் வெளியிட்டிருக்கிறது.. அந்தவகையில், நாட்டிலேயே முதல் முறையாக மணிக்கு, 280 கி.மீ வேகத்தில் செல்லும் அதிவேக புல்லட் ரயிலை ஐசிஎப் தயாரிக்க போகிறதாம்.. அந்தவகையில், மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ், பெங்களூரில் செயல்படும் பிஇஎம்எல் நிறுவனத்துடன், ஐசிஎப் நிறுவனம் இணைந்து, இந்த அதிவேக ரயிலை தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு காரணம், வந்தே பாரத் ரயில் மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் செல்லும் திறன் கொண்டதாக இருந்தாலும், ரயில் பாதையில் அதிக வளைவுகள் போன்ற காரணங்களால், 130 கிமீ வேகத்தில் மட்டுமே இயக்க முடிகிறது. எனவேதான், மணிக்கு 280 கிமீ வேகத்தில் செல்லும் அதிவேக ரயில்கள் இயக்க, ரயில்வே திட்டமிட்டுள்ளது. பிஇஎம்எல் நிறுவனத்துடன், ஐசிஎப் நிறுவனம் இணைந்து, இந்த அதிவேக ரயிலை தயாரிக்க உள்ளது.

கட்டமைப்புகள்:
இதுகுறித்து, ஐசிஎப் அதிகாரிகள் சொல்லும்போது, நம்முடைய நாட்டில் அதிக வேக ரயில்களின் தேவை அதிகரித்து கொண்டிருப்பதால், அத்தகைய ரயில்களை தயாரிக்கவும், அதற்கான கட்டமைப்பு பணிகளை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில், மும்பை -- குஜராத்தின் ஆமதாபாத் இடையே, முதலாவது புல்லட் ரயில் வழித்தடம் அமைக்கப்பட்டு வருகிறது. குஜராத்தில், 353 கிமீ தூரத்திற்கும், மஹாராஷ்டிராவில், 156 கிமீ தூரத்துக்கும் ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த தடத்தில் மணிக்கு, 280 கிமீ வேகத்தில் ரயில் ஓடும்.

ஏசி வசதிகள்: இந்த ரயிலை பிஇஎம்எல் நிறுவனத்துடன் இணைந்து, ஐசிஎப் தயாரிக்க உள்ளது. விரைவில் முதல் அதிவேக ரயிலை தயாரிக்க உள்ளோம். இதில் 12 பெட்டிகள் மட்டுமே இருக்கும். எல்லா பெட்டிகளும், AC வசதிகளுடன் சொகுசு பெட்டிகளாக இருக்கும். வரும் 2026ல் இந்த ரயிலை இயக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், பயணிகளுக்கான அனைத்து வசதிகளும் இதில் இடம்பெற்றிருக்கும்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+