வேலூரில் தேர்தல் நடக்குமா, நடக்காதா.. தனி மனிதராக கண்ணீர் சிந்தி வரும் ஏசி சண்முகம்
Recommended Video
சென்னை: வேலூர் தொகுதிக்கு தேர்தல் நடத்துவார்களா, மாட்டார்களா? என்று தனி ஒரு ஆளாகவே கண்ணீருடன் போராடிக் கொண்டிருக்கிறார் ஏசி சண்முகம்!
வேலூரில் மக்களுக்கு வினியோகம் செய்யப்படவிருந்த பணம் பிடிபட்டது. இந்தப் பணம் திமுகவிற்கு சொந்தமானது என்றும், துரைமுருகன், கதிர் ஆனந்த் ஆகியோருக்கு தொடர்பு உள்ளது என்றும் கூறப்பட்டது.

நிலைகுலைந்தார்
இதைத்தொடர்ந்து ஏப்ரல் 17ம் தேதி, தேர்தலும் ரத்து செய்யப்பட்டு விட்டது. இதனால் துரைமுருகன் தரப்பை விட அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது ஏசி சண்முகம்தான்! இது சம்பந்தமாக திமுக தரப்பில் பெரிய அளவிலான பிரச்சனை, விவாதம் என இறங்கவில்லை. ஆனால் ஏசி சண்முகம்தான் சட்டரீதியாகவே இதை அணுகினார். வேலூரில் தேர்தல் இல்லை என்று கோர்ட்டும் கைவிரித்த நிலையில்தான் ரொம்பவும் நிலைகுலைந்து போனார்.

குலுங்கி அழுதார்
ஓட்டு போட வந்திருந்த போதுகூட 4 தொகுதி இடைத்தேர்தலின்போது வேலூருக்கு தேர்தல் நடத்தினால் நல்லா இருக்கும் என்று குலுங்கி அழுதவாறே சொன்னார். அன்று முதல் இப்போதுவரை அதை தான் சொல்லி கொண்டு இருக்கிறார்.

குடியரசு தலைவர்
தேர்தல் ஆணையத்தையே நம்பி இருந்தவர், கடைசியில் குடியரசு தலைவரிடமே சென்று மனு கொடுக்கும் நிலைமைக்கு வந்தார். இத்தனை முயற்சிகளையும் தனி நபராகவே ஏசி சண்முகம் செய்து வருகிறார். இத்தனைக்கும் அவர் அதிமுக கூட்டணியில் இருப்பவர்! ஆனால் கூட்டணியில் ஒருத்தர்கூட, ஏசி சண்முகத்துக்காகவே, வேலூர் தேர்தலை குறித்தோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.

கல்லூரி
ஏசி சண்முகம் இவ்வளவு பாடுபட என்ன காரணம்? துரைமுருகனுக்கு எப்படி கல்லூரிகள், பள்ளிகள் இருக்கிறதோ அதேபோலதான் ஏசிஎஸ்-க்கும் உள்ளது. கடந்த முறை தேர்தலில் ஏசி சண்முகம் நல்ல வாக்கு சதவீதத்தை பெற்றிருந்தார். அதாவது அதிமுக முதலிடம் என்றால், ஏசி சண்முகம் இரண்டாவது இடத்துக்கு முன்னேறினார். திமுகவோ 3-ம் இடத்தைதான் பிடித்தது. அதனால் இந்த முறை எப்படியும் வெற்றிதான் என்று நம்பினார்.

தாராளங்கள்
இதைதவிர தொகுதிக்குள் நிறைய தாராளங்களை காட்டினார். அதிமுகவுக்கென தேர்தல் நிதி என்று தனியாக கொடுத்துள்ளார். வேலூரில் தேர்தலை இப்போது நடத்தாவிட்டால், இது எல்லாமே நாசமாக போய்விடுமே என்ற பீதி இன்னமும் ஏசிஎஸ்சுக்கு உள்ளது.

குழப்பம்
ஒருவேளை திரும்பவும் தேர்தல் என்று அறிவித்தாலும் "இழந்தது" கிடைக்குமா? அல்லது மீண்டும் முதலிலிருந்து செலவு செய்யணுமா? அல்லது அதிமுகவில் மீண்டும் சீட் கிடைக்குமா போன்ற கலக்கம் நிறைந்த கேள்விகள், சந்தேகங்கள், பயங்கள், குழப்பங்கள் ஏசி சண்முகத்தை சூழ்ந்து கொண்டுள்ளன!
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications