Accenture Layoff: 11 ஆயிரம் ஊழியர்களின் வேலையை பறித்த ஐடி நிறுவனம்.. AI வைத்த பெரிய ஆப்பு
சென்னை: முன்னணி ஐடி நிறுவனமான அக்சென்ச்சர் கடந்த 3 மாதத்தில் 11 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. உலகம் முழுவதும் இந்த நடவடிக்கையை அக்சென்ச்சர் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இதன் பின்னணியில் ஏஐ தான் உள்ளது. மேலும் ஊழியர்கள் தங்களின் திறமையை வளர்த்து கொள்ளாவிட்டால் இன்னும் பணியில் இருந்து ஊழியர்கள் நீக்கப்பட உள்ளதாக வார்னிங் செய்யப்பட்டுள்ளது.
AI எனும் செயற்கை நுண்ணறிவு வந்தது முதல் பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் வேலையிழப்பை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக ஐடி நிறுவனங்களில் ஏஐ-வை காரணம் காட்டி ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர்.

டிசிஎஸ், மைக்ரோசாப்ட், கூகுள், விப்ரோ உள்பட பல ஐடி நிறுவனங்களில் பணியாளர்கள் அவ்வப்போது பணியில் இருந்து நீக்கப்பட்டு வருகின்றனர். இது ஐடி துறை ஊழியர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. எப்போது வேலை பறிபோகும்? என்ற பயம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி ஏஐ சார்ந்த விஷயங்களை கற்று கொள்ள வேண்டும். அப்போது தான் பணியில் நீடிக்க முடியும் என்று பலரும் முடிவு செய்து அதற்கான நடவடிக்கையை தொடங்கி உள்ளனர். இப்படியான சூழலில் தான் Accenture ஐடி நிறுவனத்தில் 11 ஆயிரம் ஊழியர்கள் திடீரென்று பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 3 மாதங்களாக படிப்படியாக இந்த பணி நீக்கம் நடந்துள்ளது.
இதுதொடர்பாக அக்சென்ச்சர் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி ஜூலி ஸ்வீட் மீட்டிங்கில் கூறியுள்ளதாவது: ‛‛நாம் நம் அனுபவத்தின் அடிப்படையில் மறுதிறன் அடிப்படையில் திறமையானவர்களிடம் இருந்து திறன்களை பெறுவது என்பது குறுகிய காலத்தில் சாத்தியமாகாது. இதனால் ஊழியர்கள் தங்களின் திறனை உடனடியாக வளர்த்து கொள்ள வேண்டும். ஏஐ-க்களை பயன்படுத்த வேண்டும்'' என்று கூறியுள்ளார்.
இதன்மூலம் ஊழியர்கள் தங்களின் திறமையை வளர்த்து கொள்ளவிட்டால் எதிர்காலத்தில் பணி நீக்கத்தை எதிர்கொள்ளலாம் என்பதை மறைமுக வார்னிங்காக அவர் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி ஏஐ பயன்பாடு, ஊழியர்களின் திறன் மேம்பாட்டை அடிப்படையாக வைத்து அக்னெச்சர் நிறுவனம் திட்டத்தை வகுத்துள்ளது. குறிப்பாக ஏஐ-வை அதிகப்படியாக பணிக்கு பயன்படுத்தி அதனை ஒருங்கிணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது அக்சென்ச்சர் நிறுவனத்தின் ஆண்டு வருவாய் 69.7 பில்லியன் டாலராக உள்ளது. இது முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது 7 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஏஐ பயன்பாடு என்று நிறுவனம் நம்புகிறது. இதனால் ஏஐ - பயன்படுத்தி பணி செய்யும் வகையில் ஊழியர்கள் தங்களை மேம்படுத்தி கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் ஊழியர்கள் பணி நீக்கத்தை எதிர்கொள்ளலாம் என்று மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக












Click it and Unblock the Notifications