அத்தனையும் பொய்! மன்னிப்பு கேளுங்கள்! கதிரேசன் தம்பதிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய தனுஷ்! என்னாச்சு
சென்னை: நடிகர் தனுஷை தங்கள் மகன் என்று உரிமை கோரும் மதுரை தம்பதிக்கு ரூபாய் 10 கோடி கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
Recommended Video
மதுரையைச் சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர் நடிகர் தனுஷ் தங்கள் மகன் என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து இருந்தனர்.
மேலும், ஊடகங்களிலும் தனுஷ் தங்கள் மகன் என்றே தொடர்ந்து பேட்டி அளித்து வந்தனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், ஒரு கட்டத்தில் நடிகர் தனுஷிடம் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்ற வாதம் கூட முன்வைக்கப்பட்டது.
இருப்பினும், இந்த வாதங்களை ஏற்க மறுத்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, கதிரேசன் - மீனாட்சி தம்பதி தொடர்ந்து வழக்கை ரத்து செய்தது. வழக்கு நிறைவடைந்த நிலையில், மதுரை தம்பதி திடீரென வக்கீல் நோட்டீஸ் ஒன்றை அனுப்பி இருந்தனர்.
இயக்குநர் கஸ்தூரிராஜா தங்களை கொலை செய்ய முயன்றதாகவும், நீதிமன்றத்தில் போலி ஆவணங்களைச் சமர்ப்பித்ததாகவும் குற்றஞ்சாட்டி நடிகர் தனுஷுக்கும், கஸ்தூரி ராஜாவுக்கும் மதுரை கதிரேதன் தம்பதி நோட்டீஸ் அனுப்பினர்.
இதற்கிடையே இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், தவறினால் 10 கோடி ரூபாய் மன நஷ்ட ஈடு வழக்கு தொடரப்படும் என்றும் நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் கஸ்தூரிராஜா சார்பில் கதிரேசன் தம்பதியினருக்கு வழக்கறிஞர் காஜாமொய்தீன் கிஸ்தி நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.