தேமுதிகவில் விலகிய கையோடு.. அதிமுகவில் இணைந்தார் நடிகர் மீசை ராஜேந்திரன்.. என்ன நடந்தது?
சென்னை: தேமுதிக செய்தி தொடர்பாளராக இருந்த நடிகர் மீசை ராஜேந்திரன் இன்று அந்த கட்சியில் இருந்து விலகினார். அதன்பிறகு எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த நடிகர் மீசை ராஜேந்திரன் அதிமுகவில் சேர்ந்து கொண்டார்.

தமிழ் சினிமாவில் நெகட்டிவ் ரோல் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் மீசை ராஜேந்திரன். இவருக்கு சினிமா வாய்ப்பை வழங்கியவர் நடிகர் விஜயகாந்த். விஜயகாந்த் ஹீரோவாக நடித்த ரமணா திரைப்படத்தில் மீசை ராஜேந்திரனை நடிகராக அறிமுகம் செய்தார். அதன்பிறகு மீசை ராஜேந்திரன் ஏராளமான திரைப்படங்களில் நடித்தார்.
விஜயகாந்த் மீது அதிக விசுவாசத்துடன் வலம் வந்தார். மேலும் விஜயகாந்த் தொடங்கிய தேமுதிக கட்சியில் சேர்ந்து செயல்பட்டு வந்தார். 2006 சட்டசபை தேர்தலில் திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதன்பிறகு 2016, 2021 சட்டசபை தேர்தல்களில் தேமுதிக சார்பில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
விஜயகாந்த் உடல்நலம் மோசமான பிறகு கட்சியின் பொதுச்செயலாளராக அவரது மனைவி பிரேமலதா செயல்பட தொடங்கினார். அப்போதும் மீசை ராஜேந்திரன் கட்சி மாறாமல் தேமுதிகவில் பயணித்தார். தேமுதிகவின் செய்தி தொடர்பாளராக வலம் வந்தார். இந்நிலையில் தான் இன்று அவர் பிரேமலதாவிற்கு கடிதம் எழுதினார்.
அதில், கட்சி பொறுப்புகளில் இருந்து தன்னை விடுவிக்கும்படி அவர் கூறியிருந்தார். இதன்மூலம் அவர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்த நிகழ்வு இன்று மதியம் தான் நடந்தது. இதையடுத்து இன்று மாலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை, மீசை ராஜேந்திரன் சந்தித்து அதிமுகவில் சேர்ந்தார். அப்போது முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு உடன் இருந்தார்.
முன்னதாக தேமுதிகவில் இருந்து விலகியது பற்றி மீசை ராஜேந்திரன் கூறுகையில், ''நான் 31 ஆண்டுகளாக கேப்டன் (விஜயகாந்த்) மன்றத்தில் இருந்தேன். 21 ஆண்டுகளாக கட்சியில் இருக்கிறேன். விஜயகாந்த் உடன் விஸ்வாசமாக இருந்தேன். ஆனால் எனது விஸ்வாசத்துக்கு தகுந்த மதிப்பும், மரியாதையும் இல்லை என்பது இப்போது தெரியவந்துள்ளது.
இதனால் அங்கிருந்து நான் விலகுகிறேன். கேப்டன் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் எந்த வித மனவருத்தமும் எனக்கும் கிடையாது. கேப்டன் இல்லை என்றால் நான் இல்லை. சினிமா உள்பட அனைத்து இடங்களிலும் கேப்டன் தான் எனக்கு வாய்ப்பளித்தார். ஆனால் இப்போது அங்கு (தேமுதிக) இருக்கும் சூழ்நிலைகள் சரியில்லை. நிர்வாக பொறுப்புகளில் உள்ளவர்களால் சூழல் சரியில்லை. இதனால் நான் ராஜினாமா செய்வதாக கொடுத்துள்ளேன்'' என்று கூறியிருந்தார்.
அதாவது விஜயகாந்த் கட்சியை வழிநடத்தியபோது அவர் தனித்து போட்டியிட்டார். அதன்பிறகு அதிமுக கூட்டணியிலும், மக்கள் நல கூட்டணியிலும் போட்டியிட்டார். மாறாக திமுக கூட்டணியில் சேரவே இல்லை. ஆனால் இந்த முறை திமுக கூட்டணியில் தேமுதிக முதல் முறையாக இணைந்துள்ளது. திமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு ஒரு ராஜ்யசபா, 10 சட்டசபை தொகுதிகள் வழங்கப்பட்டது.
இதில் ராஜ்யசபா எம்பியாக பிரேமலதாவின் தம்பி சுதீஷ் தேர்வாகி உள்ளார். 10 சட்டசபை தொகுதிகளில் விருத்தாச்சலத்தில் பிரேமலதாவும், விருதுநகரில் விஜய பிரபாகரனும் போட்டியிடுகின்றனர். மீசை ராஜேந்திரனுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை. இப்படியான சூழலில் தான் நிர்வாக பொறுப்புகளில் உள்ளவர்களால் தேமுதிகவில் சூழல் சரியில்லை என்று கூறி மீசை ராஜேந்திரன் தேமுதிகவில் இருந்து வெளியேறி அதிமுகவில் ஐக்கியமாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தேமுதிகவிற்கு 'குட்பை'.. பிரேமலதாவிற்கு நடிகர் மீசை ராஜேந்திரன் கடிதம்.. கடும் அதிருப்தியின் பின்னணி -
ரூ.73 கோடி ட்விஸ்ட்.. விருதுநகரில் விஜய பிரபாகரன் அதிரடி.. புயலென கிளம்பும் மெகா பிசினஸ் சாம்ராஜ்யம் -
கூட்டணி மாறியதால் தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கலை! ஆனால் அது உண்மைதான்! எடப்பாடி பழனிசாமி -
அடியோடு ஆட்டம் காணும் இரட்டை இலை... ஸ்டாலின் 2.0.. திரும்பி பார்க்க வைத்த 'இன்சைட் எலெக்ஷன்' சர்வே -
அதிமுக 167 வேட்பாளர்கள்.. எந்தெந்த சமூகத்திற்கு எவ்வளவு முன்னுரிமை? - முழு விவரம் இதோ! -
ஸ்டாலின் காதுக்கு போன 1 பெயர்.. அதிமுகவிலும் தெரிஞ்சுடுச்சு! உளவுத்துறை ரிப்போர்ட் என்ன சொல்லுச்சு -
11% வாக்கு வித்தியாசம்.. திமுக 200+ கண்டிப்பாக வரும்! சர்வே சொல்லும் ரகசிய தகவல்.. கவனிச்சீங்களா! -
அடுத்தடுத்து வெளியான 4 சர்வே.. எல்லாம் சொல்லும் ஒரே விஷயம்.. நாம் தமிழர் கட்சிக்கு பெரிய சிக்கல்! -
எஃகு கோட்டையாக நிற்கும் எடப்பாடி தொகுதி.. இங்கு எப்போதும் அதிமுகவின் ஆட்டம் தான்! கடந்து வந்த பாதை -
வேலூர் தொழில் அதிபர்களால் ட்விஸ்ட்.. ஜோலார்பேட்டையில் கேசி வீரமணிக்கு கடைசி நிமிடத்தில் என்ன நடந்தது -
உன்னை கட்சியில் வைத்திருந்தால்.. அதிமுகவையே விற்றுருப்பாய்.. ஓபிஎஸ்ஸை தரக்குறைவாக பேசிய எடப்பாடி! -
234ஐ விடுங்க.. தமிழ்நாடு தேர்தல் முடிவை தீர்மானிக்க போகும்.. அந்த 131 தொகுதிகள்.. எப்படி தெரியுமா? -
ஒற்றைத் தலைமை ரெடி! எம்ஜிஆர் - ஜெயலலிதா பலத்தை எட்டிவிட்டாரா எடப்பாடி? -
மகளிர் உரிமை தொகை மட்டுமல்ல... மகளிர் உரிமையும் முக்கியம்.. திமுக, அதிமுகவின் கள நிலவரம் -
எடப்பாடிக்கு அதிர்ச்சி! திருச்சி கிழக்கு அதிமுக வேட்பாளருக்கு தொடர்புடைய இடங்களில் விடிய விடிய சோதனை













Click it and Unblock the Notifications