தமிழ் படங்களை ஏன் இந்தியில் டப் செய்கிறார்கள்? உளறித் தள்ளிய பவன் கல்யாண்.. பிரகாஷ் ராஜ் பதிலடி!
சென்னை: இந்தி வேண்டாம், ஆனால் பாலிவுட்டில் இருந்து வரும் பணம் மட்டும் வேண்டும் என்று தமிழக அரசியல்வாதிகளை விமர்சித்த ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் கருத்துக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் பதிலடி கொடுத்துள்ளார். இந்தியை திணிக்காதீர்கள் என்று கூறுவதால் பிற மொழியை நாங்கள் வெறுக்கிறோம் என்பதல்ல என்றும் பிரகாஷ் ராஜ் பதில் அளித்திருக்கிறார்.
தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி மத்திய அரசால் நிறுத்தி வைக்கப்பட்ட நாள் தொடங்கி இதுவரை இந்தி திணிப்பு தொடர்பாக விவாதம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. தேசிய கல்வி கொள்கை மற்றும் மும்மொழி கொள்கையை தமிழக அரசு தீவிரமாக எதிர்த்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கைக்கு பாஜக மற்றும் அமமுக கட்சிகள் மட்டுமே ஆதரவாக இருந்து வருகின்றன.

ஏனைய கட்சிகள் அனைத்தும் ஒரே குரலில் மும்மொழி கொள்கையை எதிர்க்கின்றன. தமிழக அரசின் இந்தி திணிப்பு எதிர்ப்பு தேசிய அளவில் தொடர் விவாதமாக மாறி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து தாய் மொழி குறித்த விவாதங்கள் அதிகரித்துள்ளன. இந்த நிலையில் இந்தி திணிப்பு விவகாரத்தில் தமிழக அரசியல்வாதிகளின் நிலைப்பாட்டை ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கடுமையாக சாடி இருக்கிறார்.
ஜன சேனா கட்சியின் 12வது ஆண்டு விழாவில் பவன் கல்யாண் பேசுகையில், நாட்டில் 2 மொழிகள் மட்டுமல்ல, தமிழ் உட்பட பல மொழிகள் தேவை. மொழியில் பன்முகத்தன்மையை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அது நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு மட்டுமல்லாமல், மக்களிடையே அன்பையும், ஒற்றுமையையும் வளர்க்கும். இந்தியாவில் பல மொழிகள் இருப்பது நல்லது.
சமஸ்கிருதத்தை ஏன் விமர்சிக்கின்றனர் என்று புரிந்து கொள்ள முடியவில்லை. அதேபோல் தமிழக அரசியல்வாதிகள் ஏன் இந்தியை எதிர்க்கிறார்கள் என்பதும் தெரியவில்லை. ஆனால் அவர்கள் தமிழ் திரைப்படங்களை இந்தியில் டப் செய்து வெளியிட அனுமதிக்கிறார்கள். பாலிவுட்டில் இருந்து கிடைக்கும் பணம் மட்டும் தேவை.
ஆனால் அவர்களுக்கு இந்தி தேவையில்லையா? இது என்ன லாஜிக் என்று கேள்வி எழுப்பியுள்ளார். பவன் கல்யாணின் இந்த பேச்சு தமிழ்நாட்டில் விவாதமாகியுள்ளது. ஏற்கனவே சனாதன தர்மம் தொடர்பான பவன் கல்யாணின் பேச்சிற்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பு எழுந்தது. இந்த நிலையில் பவன் கல்யாணின் கருத்துக்கு நடிகரும், அரசியல்வாதியுமான பிரகாஷ் ராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.
பிரகாஷ் ராஜ் கன்னடத்தில் தனது எக்ஸ் பக்கத்தில், உங்களின் இந்தி மொழியை எங்கள் மீது திணிக்காதீர்கள் என்று சொல்வது, வேறு மொழியை வெறுக்கிறோம் என்று அர்த்தமில்லை. தாய் மொழியை தாயைப் போல் சுயமரியாதையோடு காப்பதற்காகதான். இதனை பவன் கல்யாணிடம் யாராவது கூறுங்கள் என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.
மேலும் பவன் கல்யாணின் கருத்துக்கு திமுகவினர் பலரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்தியில் டப் செய்து வெளியிடும் படங்களை மக்கள் பார்க்காமல் இருப்பதற்கான வாய்ப்பு அளிக்கப்படுகிறது என்றும், ஆனால் இந்தியை படிக்க வேண்டிய கட்டாயம் தங்களுக்கு ஏற்படுகிறது என்றும் சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications