"மோடி தேநீர் விற்றதை நம்புகிறார்கள்.. நாட்டை விற்பதை நம்ப மறுக்கிறார்கள்!" தடதடக்கும் பிரகாஷ் ராஜ்
சென்னை: நடிகர் பிரகாஷ் ராஜ் பிரதமர் மோடியை விமர்சித்துப் பதிவிட்டுள்ள ட்வீட் இணையத்தில் இப்போது வைரலாகி உள்ளது.
Recommended Video
பிரபல திரைப்பட நடிகர் பிரகாஷ் ராஜ் பல்வேறு சமூகப் பிரச்சினைகளுக்குக் கடந்த சில ஆண்டுகளாகக் குரல் கொடுத்து வருகிறார். பல விஷயங்களில் தனது நிலைப்பாட்டையும் வெளிப்படையாகக் குறிப்பிட்டு வருகிறார்.
மேலும், பிரகாஷ் ராஜ் தொடர்ச்சியாகப் பிரதமர் நரேந்திர மோடியையும் ஆளும் மத்திய பாஜக அரசின் செயல்பாடுகளை விமர்சித்தே வருகிறார்.

பிரகாஷ் ராஜ்
கடந்த 2017 செப். மாதம் பிரபல எழுத்தாளர் கௌரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்ட பின்னர், நடிகர் பிரகாஷ் ராஜ் சமூக ஊடகங்களில் அரசியல் ரீதியாகத் தொடர்ச்சியாகத் தனது கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். கடந்த 2019இல் பெங்களூரு மத்திய மக்களவைத் தொகுதியில் கூட அவர் சுயேச்சை வேட்பாளராகக் களமிறங்கினார். அந்தத் தேர்தலில் அவரால் பெற்ற பெற முடியவில்லை என்றாலும் கூட 3ஆம் இடம் பிடித்தார்.

தேநீர் விற்றவர்
அதன் பின்னரும் கூட அவர் ஆளும் பாஜகவை அவ்வப்போது விமர்சித்தே வருகிறார். அவர் தற்போது பிரதமர் மோடியை நேரடியாக விமர்சித்துப் பதிவிட்ட ட்வீட்டை இணையத்தில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். நடிகர் பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், "பிரதமர் மோடி தேநீர் விற்றதை நம்பியவர்கள். அவர் நாட்டையும் விற்றுக் கொண்டிருப்பதை நம்ப மறுக்கிறார்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

முதல்முறை இல்லை
ஆளும் பாஜக அரசை அவர் விமர்சிப்பது இது முதல்முறை இல்லை. டெல்லி ஜஹாங்கிர்புரியில் இஸ்லாமியர்களின் வீடுகள் ஆக்கிரமிப்பு நிலங்களில் கட்டப்பட்டுள்ளதாகக் கூறி அவற்றை இடிக்க மாநகராட்சி உத்தரவிட்டது. இதனை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கட்டிடங்களை இடிக்க இடைக்காலத் தடை விதித்தது. ஆனால், நீதிமன்ற ஆணை தங்களுக்குக் கிடைக்கவில்லை எனக்கூறி அதிகாரிகள் ஏராளமான வீடுகளை இடித்துத் தள்ளினர்.

நாட்டை அழித்துவிடுவார்
இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி நிலையில், இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர். இதுகுறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டரில், "சிலைகள் கட்டப்படுகின்றன.. வீடுகள் இடிக்கப்படுகின்றன.. மக்கள் பேசாவிட்டால் கூடிய விரைவில் நாட்டையும் அவர்கள் அழித்துவிடுவார்கள்" என்று பதிவிட்டு இருந்தார்.

தேர்தல் ஆலோசகர் பிகே
பிரகாஷ் ராஜ் கடந்த சில மாதங்களாகவே நேரடி அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில் பிரபல தேர்தல் ஆலோசகர் தெலங்கானா முதல்வர் கேசிஆரை சந்தித்து, தேர்தல் தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தி இருந்தார். அப்போது பிரகாந்த் கிஷோர் உடன் பிரகாஷ் ராஜும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications