ஸ்டெர்லைட்டை திறக்க கூடாது.. நீதிமன்றத்திலும் வெற்றி பெற முடியாது.. அன்றே சொன்ன ரஜினி- வைரல் வீடியோ
சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கூடாது என்றும் நீதிமன்றத்திற்கு சென்றாலும் வெற்றி பெற முடியாது என்றும் அன்றே ரஜினிகாந்த் சொன்னது தற்போது வைரலாகி வருகிறது.
Recommended Video
தூத்துக்குடியில் இருக்கும் ஸ்டெர்லைட் நிறுவனத்தை எதிர்த்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது 100-ஆவது நாள் போராட்டத்தின்போது ஊர்வலம் சென்ற அவர்கள் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகிவிட்டனர். ஏராளமானோர் காயமடைந்தனர். இதையடுத்து ரஜினிகாந்த் காயமடைந்தவர்களை சந்திக்கவும் இறந்தவர்களின் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறவும் தூத்துக்குடி சென்றிருந்தார்.

ஸ்டெர்லைட்
அவர் கூறுகையில் இப்ப அரசாங்கம் சொல்லிட்டாங்க, ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு பூட்டு போட்டாகிவிட்டது. அது திறக்கப்படாது என்று. இந்த நிலையில் ஸ்டெர்லைட் நிறுவனத்தினர் கோர்ட்டிற்கு சென்றார்களேயானால் அவர் மனிதர்களே கிடையாது.

நீதிமன்றத்தில்
நீதிமன்றத்தில் இருப்பவர்கள் மனிதர்கள்தான். எனவே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தாலும் அங்கு ஜெயிக்காது. ஸ்டெர்லைட் கோர்ட்டுக்கு போய் ஜெயிக்க விடக் கூடாது, அவர்கள் போகவும் மாட்டாங்க. மக்கள் சக்தி முன் எந்த சக்தியும் ஒன்றுமே செய்யாது.

ஆலை திறக்க வேண்டும்
ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தினர் உண்மையான மனிதர்களாக இருந்தால் இத்தனை பேர் அடிப்பட்டு உயிரிழந்து கிடக்கும் நிலையில் அந்த ஆலையை திறக்க வேண்டும் என்ற நினைப்புக் கூட வரக் கூடாது என ரஜினிகாந்த் ஆவேசமாக பேசியிருந்தார்.

வைரல் வீடியோ
இந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேதாந்தா நிறுவனம் சார்பில் ஒரு வழக்கு போடப்பட்டது. அந்த வழக்கின் தீர்ப்பை இன்று சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்டது. அதில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கூடாது, தமிழக அரசு செய்தது சரியே என கூறி ஆலை திறப்பு தொடர்பாக வேதாந்தா தாக்கல் செய்த அனைத்து மனுக்களையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சாதகம்
எனவே கோர்ட்டுக்கு போயும் வேதாந்தாவுக்கு சாதகமான தீர்ப்பு வரவில்லை. இதனால் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கூடாது. நீதிமன்றத்திற்கு சென்றாலும் வெற்றி பெற முடியாது என அன்றே சொன்ன ரஜினிகாந்த் என அவர் பேசிய வீடியோக்களை ரசிகர்கள் அதிகமாக பரப்பி வருகிறார்கள்.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications