என்னையும், எனது ரசிகர்களையும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது.. ரஜினிகாந்த் திடீர் அறிக்கை
Recommended Video

சென்னை: என்னையும் எனது ரசிகர்களையும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது என்று நடிகர் ரஜினிகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கடந்த 23ஆம் தேதி ரஜினிகாந்த் வெளியிட்ட ஒரு அறிக்கை ரசிகர்கள் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த அறிக்கையில், அரசியலில் சாதிப்பதற்கு மக்கள் மன்றத்தில் பணியாற்றுவது மட்டுமே போதும் என்று நினைத்திருந்தால் அது புத்தி பேதலித்து விட்டது என்பதற்கான அர்த்தம்.

காட்டமான அறிக்கை
மக்களின் ஆதரவைப் பெறுவது அவசியம். மக்கள் மன்றத்தின் மூலமாக அரசியலில் பதவி பெறலாம் என்று யாரும் எண்ணிக் கொண்டிருக்க வேண்டாம். முதலில் உங்கள் பெற்றோரை கவனியுங்கள். இவ்வாறெல்லாம் ரசிகர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை ரஜினிகாந்த் வழங்கியிருந்தார்.

ரசிகர்கள்
இதனால் மூத்த ரசிகர்கள், மன்ற நிர்வாகிகள் சிலர் அதிர்ச்சி அடைந்ததாக தகவல் வெளியான நிலையில் இன்று திடீரென, மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் சென்னையில் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர்கள் கருத்துக்களை கேட்டறிந்தார்.

மீண்டும் அறிக்கை
ரசிகர்களின் உள்ளத்தை புரிந்து கொண்ட ரஜினிகாந்த், இப்பொழுது மீண்டும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், தான் ஏன் அந்த அறிக்கையை வெளியிட்டேன் என்பதற்கான விளக்கத்தை சில வரிகளில் தெரியப்படுத்தியுள்ளார்.

பிரிக்க முடியாது
"அக்டோபர் 23ஆம் தேதி மன்ற செயல்பாடுகள் குறித்து சில உண்மைகளை சொல்லியிருந்தேன். நான் கூறியது கசப்பானதாக இருந்தாலும் அதில் உள்ள உண்மை, நியாயத்தை புரிந்து கொண்டதற்கு நன்றி. உங்களைப் போன்ற ரசிகர்களை நான் அடைந்ததற்கு மிகவும் பெருமைப்படுகிறேன். என்னையும் உங்களையும் யாராலும், எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது. நாம் எந்த பாதையில் போனாலும், அந்த பாதை நியாயமானதாக இருக்கட்டும். ஆண்டவன் நமக்கு துணை இருப்பான். இவ்வாறு ரஜினிகாந்த் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். 23ம் தேதி நீண்ட அறிக்கை வெளியிட்டிருந்த ரஜினிகாந்த், இன்று சுருக்கமாக இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications