Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நூலிழையில் உயிர் தப்பிய நடிகர் சூர்யா.. கங்குவா படப்பிடிப்பில் ஷாக்.. ரோப் கேமரா விழுந்து விபத்து!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை பூந்தமல்லி அருகே ‛கங்குவா' படப்பிடிப்பின்போது ரோப் கேமரா அறுந்து விழுந்ததில் நடிகர் சூர்யா நூலிழையில் உயிர் தப்பினார்.

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வரும் திரைப்படம் கங்குவா. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு என்பது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ‛பான் இந்தியா' திரைப்படமாக இது உருவாகி வருகிறது.

இந்த படத்தில் நடிகர் சூர்யாவுடன் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தை 3டி முறையிலும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

actor-surya-narrowly-escaped-after-rope-camera-fall-down-in-kanguva-movie-shooting

தற்போது இந்த படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் நடிகர் சூர்யா நடிக்கும் சண்டை காட்சிகள் சென்னை பூந்தமல்லி அருகே செம்பரம்பாக்கம் ஈவிபி பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. இதற்காக அங்கு அரங்குகள் அமைத்து சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இன்று அங்கு சண்டை காட்சி திரைப்படமாக்கப்பட்டது. இதில் நடிகர் சூர்யா நடித்தார்.

ரோப் கேமரா உதவியுடன் இந்த சண்டை காட்சிகள் படம்பிடிக்கப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக திடீரென்று ரோப் கேமரா அறுந்து விழுந்தது. இதை கண்டவுடன் ஸ்டண்ட் மாஸ்டர்கள் அலறியுள்ளனர். இதையடுத்து சுதாரித்து கொண்ட நடிகர் சூர்யாவும் விலக முயன்றுள்ளார். ஆனால் ரோப் கேமரா அவரது தோளில் விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதில் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பிய நிலையில் லேசான காயமடைந்துள்ளார். இதையடுத்து படப்பிடிப்பு உடனடியாக நிறுத்தப்பட்டது. நடிகர் சூர்யாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் நசரத் பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணையை தொடங்கி உள்ளனர். ஈவிபி பிலிம் சிட்டியில் இதுபோன்ற விபத்து நடப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் பல விபத்துகள் நடந்துள்ளன.

முன்னதாக இங்கு நடிகர் கமல்ஹாசனின் இந்தியன் -2 படப்பிடிப்பு நடந்தது. அப்போது கிரேன் அறுந்து 2 பேர் இறந்தனர். மேலும் சிலர் காயமடைந்தனர். அதேபோல் நடிகர் ரஜினியின் ‛காலா' திரைப்பட சூட்டிங்கின்பேது மின்சாரம் தாக்கி ஒருவர் இறந்து போனார். அதன்பிறகு நடிகர் விஜயின் ‛பிகில்' படப்பிடிப்பின்போது கிரேன் விழுந்து ஒருவர் இறந்தார். இதன் தொடர்ச்சியாக தான் தற்போது சூர்யாவின் கங்குவா படப்பிடிப்பின்போது ரோப் கேமரா அறுந்து விழுந்து அவர் காயமடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+