தங்க மங்கை கோமதி மாரிமுத்துவுக்கு நடிகர் விஜய் சேதுபதி ரூ.5 லட்சம் நிதியுதவி... பலரும் பாராட்டு
சென்னை: தங்க மங்கை கோமதி மாரிமுத்துவுக்கு நடிகர் விஜய் சேதுபதி ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகள் மூலம் கோமதி மாரிமுத்துவுக்கு காசோலை வழங்கப்பட்டது.
3-வது சர்வதேச ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் நாட்டின் தோஹா நகரில் நடைபெற்றது. இதில் 800 மீட்டர் தடகளப் போட்டியில், தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து, தங்கம் வென்று நாட்டிற்கு சிறப்பை தேடி தந்துள்ளார். இதனால் அவருக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், பிரபலங்கள் வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக, தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துக்கு, திமுக சார்பில் 10 லட்சம் ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது. கோமதி மாரிமுத்து குடும்பத்தினரை நேரில் அழைத்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் காசோலையை வழங்கினார்.
இந்தநிலையில், இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி மற்றும் காங்கிரஸ் அறக்கட்டளை உறுப்பினர்கள் 5 லட்சத்திற்கான காசோலையை வழங்க உள்ளனர்.
இதற்கிடையே, தமிழக அரசு உதவி கிடைத்தால் ஒலிம்பிக்கிலும் தங்கம் வெல்வேன் என்று கோமதி மாரிமுத்து கூறியுள்ள நிலையில். தேர்தல் விதிமுறைகள் தளர்த்தப்பட்ட பின் தடகள வீராங்கனை கோமதிக்கு, அவர் விரும்புகிற அளவுக்கு உதவியை செய்ய தமிழக அரசு தயாராக உள்ளது என்று மீனவளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications