விஜயகாந்த் மருத்துவமனையில் மீண்டும் அனுமதி.. என்ன காரணம்? தேமுதிக தந்த விளக்கம்
சென்னை: நடிகர் விஜயகாந்த் மீண்டும் சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். அதன்பிறகு அவர் தேமுதிக கட்சியை தொடங்கி அரசியலில் நுழைந்தார். எம்எல்ஏவாகவும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவராகவும் அவர் செயல்பட்டார்.

இதற்கிடையே தான் அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு சமருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சிகிச்சையை தொடர்ந்து அவர் சினிமா மற்றும் அரசியலில் இருந்து விலகினார்.
இந்நிலையில் தான் அவ்வப்போது நடிகர் விஜயகாந்த்துக்கு மருத்துவமனையில் பரிசோதனைகள் என்பது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையே தான் கடந்த மாதம் 18ம் தேதி சென்னை சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார்.
முதலில் அவர் வழக்கமான பரிசோதனைக்கு சென்றுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அவருக்கு சளி, இருமல் காரணமாக அவருக்கு சுவாசிப்பதில் பிரச்சனை இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் 2 வாரங்களுக்கு மேலாக சிகிச்சை பெற்றார். விஜயகாந்த் பூரண குரணமடைந்தார். இதையடுத்து கடந்த டிசம்பர் 11ம் தேதி அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இதையடுத்து டிசம்பர் 14ம் தேதி தேமுதிக சார்பில் நடந்த கூட்டத்தில் விஜயகாந்த் பங்கேற்றார். இதையடுத்து பொதுக்குழு, செயற்குழு தேர்வின் விஜயகாந்த் முன்னிலையில் அவரது மனைவி பிரேமலதா தேமுதிகவின் பொருளாளராக தேர்வு செய்யப்பட்டார். இந்த கூட்டத்தில் விஜயகாந்த் மாஸ்க் அணிந்து இருக்கையில் அமர்ந்து இருந்தார். அவர் வழக்கம்போல் பேசவில்லை. இருப்பினும் மருத்துவமனையில் இருந்து மீண்டு வந்த விஜயகாந்தை பார்த்து தொண்டர்கள் உற்சாகமாகினர்.
இந்நிலையில் தான் தற்போது மீண்டும் விஜயகாந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக தேமுதிக சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ‛‛தேசி முற்போக்கு திராவிட கழக தலைவர் கேப்டன் விஜயகாந்த் 15 நாட்களுக்கு பிறகு வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். பூரண நலத்துடன் இருக்கிறார். பரிசோதனை முடிந்து நாளை மறுநாள் வீடு திரும்புகிறார்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications