விக்ரமுக்கு லேசான நெஞ்சுவலிதான்..வதந்தி பரப்ப வேண்டாம்..சீக்கிரம் டிஸ்சார்ஜ் - மேனேஜர் விளக்கம்
சீயான் விக்ரம் தற்போது நலமுடன் இருக்கிறார், யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம் என நடிகர் விக்ரமின் மேலாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.
சென்னை: நடிகர் விக்ரம் உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருவதாக தகவல் வெளியானது. அவருக்கு லேசான நெஞ்சுவலிதான் ஏற்பட்டதாக அவரது மேலாளர் விளக்கம் அளித்துள்ளார். விக்ரம் தற்போது நலமுடன் இருக்கிறார், யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவும் அவரது மேலாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.
நடிகர் விக்ரம் டிவி சீரியலில் நடித்து மீடியாவில் அறிமுகமானார். என் காதல் கண்மணி படத்தில் அறிமுகமானாலும் தந்துவிட்டேன் என்னை படத்தில் நடித்தார். பாலவின் சேது படம் மூலம் பிரபலமடைந்தார்.
தொடர்ந்து பிதாமகன் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதினை பெற்றுள்ளார். அவர் நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

பொன்னியின் செல்வன்
நடிகர் கோப்ரா, பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ள நிலையில் அடுத்ததாக இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கும் திரைப்படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர் இன்று மாலை வெளியாகவுள்ளது. இதனை நடிகர் சூர்யா வெளியிடவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

நடிகர் விக்ரம்
56 வயதாகும் விக்ரமுக்கு இன்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விக்ரமுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிக்சை அளித்து வருவதாக தகவல் வெளியானது. அவரது மாரடைப்பு ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. திடீரென நடிகர் விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நெஞ்சுவலிதான்
சீயான் விக்ரம் தற்போது நலமுடன் இருக்கிறார், யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம் என நடிகர் விக்ரமின் மேலாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். நடிகர் விக்ரமின் மேலாளர் சூர்ய நாராயணன் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "அன்பான ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு, சீயான் விக்ரமுக்கு லேசான நெஞ்சு வலி இருந்தது, அதற்காக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அறிக்கைகள் தவறாகக் கூறுவதுபோல் அவருக்கு மாரடைப்பு ஏற்படவில்லை. இது தொடர்பான வதந்திகளைக் கேட்டு வேதனை அடைகிறோம்.

விரைவில் டிஸ்சார்ஜ்
இந்த நேரத்தில் குடும்பத்திற்குத் தேவையான தனிமையை தாருங்கள். நமது அன்பான சீயான் இப்போது நலமாக இருக்கிறார். இன்னும் ஒரு நாளில் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். இந்த அறிக்கை தெளிவை அளிக்கும் என்றும், பொய்யான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும் நம்புகிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications