நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கு.. 4 பேரை காவலில் எடுத்தது போலீஸ்! அதிரடி விசாரணை
சென்னை: நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் 4 பேருக்கு 4 நாட்கள் போலீஸ் காவல் அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து போதைப்பொருள் சப்ளை செய்த பிரசாத், ஜான் உள்பட 4 பேரிடமும் நுங்கம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
போதைப் பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் அவரை தொடர்ந்து நடிகர் கிருஷ்ணா அடுத்தடுத்து கைதானது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இருவரும் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் விசாரணையை போலீசார் தொடங்கியுள்ளனர்.

4 பேருக்கு போலீஸ் காவல்
இதில் ஏற்கனவே போதைப் பொருள் சப்ளை செய்ததாக கைது செய்யப்பட்டிருந்த அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத், கானாவை சேர்ந்த ஜான், கெவின் மற்றும் சேலத்தை சேர்ந்த பிரதீப் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 4 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். முன்னதாக அவர்களிம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் தான் நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் நடிகர் கிருஷ்ணாவை நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில், கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில், போதைப் பொருள் சப்ளை செய்த 4 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நுங்கம்பாக்கம் போலீசார் முடிவு செய்தனர். அதன்படி நேற்று பிரசாத், ஜான், பிரதீப் குமார், கெவின் ஆகிய 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்களை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க போலீஸ் தரப்பில் அனுமதி கோரப்பட்டது. இதையடுத்து நீதிபதி அவர்கள் 4 பேரையும் 4 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி உத்தரவிட்டது.
விசாரணையை தொடங்கிய போலீசார்
இதையடுத்து நுங்கம்பாக்கம் போலீசார் அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையின் மூலம் மேலும் பலர் சிக்கலாம் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே மூன்றெழுத்து நடிகர், நான்கெழுத்து இசையமைப்பாளர் போதைப் பொருள் பயன்படுத்தியதாகன பல்வேறு யூகங்கள் பரவி வரும் நிலையில் இந்த விசாரணை இதற்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
போதைப் பொருள் வழக்கு
தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் 'கொக்கைன்' போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக சேலம், சங்ககிரியை சேர்ந்த பிரதீப்குமார் (வயது 38) என்பவரை கைது செய்து விசாரித்து வந்தனர். அப்போது அவருக்கு ஆப்பிரிக்க நாடான கயானாவை சேர்ந்த ஜான் (38) என்பவர் கொகைன் போதைப்பொருளை சப்ளை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து அவரையும் போலீசார் கைது செய்தனர். ஓசூரில் கைது செய்யப்பட்ட ஜானை சென்னை அழைத்து வந்து போலீசார் விசாரித்தனர். யாருக்கெல்லாம் சப்ளை செய்தார் என்று விசாரித்தபோது, நடிகர் ஸ்ரீகாந்த் பெயரை அவர் கூறினார். இதன்பின்னர் கடந்த 22 ஆம் தேதி ஸ்ரீகாந்தை நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு வர வைத்து விசாரணை செய்தனர். இதில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது.
கேட்டு வாங்கினார்
தடை செய்யப்பட்ட கொகைன் போதைப்பொருளை பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்துக்கு வரும் ஜூலை 7 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஸ்ரீகாந்த், முன்னாள் அதிமுக பிரசாத்திடம் அடிக்கடி கொக்கைன் வாங்கி வந்ததாகவும் குறிப்பாக மூன்று முறை அவராகவே கொடுத்ததகவும் கூறினார். சம்பள பாக்கி தொகைக்காக கொக்கைன் கொடுத்த நிலையில், அதை பயன்படுத்திய ஸ்ரீகாந்த், அதற்கு அடிமையாக நான்காவது முறையாக தானே கேட்டு வாங்கியதாகவும் கூறியிருந்தார்.
அதேபோல, துபாயில் இருந்து சென்னை திரும்பிய நடிகர் ஸ்ரீகாந்த், அன்று இரவே தனது வீட்டில் பார்ட்டி நடத்தியிருக்கிறார். அந்த பார்ட்டியில் கொக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளார். ஸ்ரீகாந்த் வீட்டில் நடந்த பார்ட்டியில் நடிகர் கிருஷ்ணாவும் போதைப்பொருள் பயன்படுத்தியதாக ஸ்ரீகாந்தே வாக்கு மூலம் அளித்ததாக கூறப்படுகிறது. இதையடுதுத்து தான், கிருஷ்ணாவையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications