போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகை அஞ்சு கிருஷ்ணா உள்ளிட்ட 9 பேர் கைது.. மெத்தபெட்டமைன் பறிமுதல்!
சென்னை: போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகை அஞ்சு கிருஷ்ணா கைது செய்யப்பட்டுள்ளார். 'வெள்ளிமலை' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள அஞ்சு கிருஷ்ணா மற்றும் துணை நடிகை நிவேதா உள்ளிட்டோர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டனர். இது தமிழ் திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இந்த விவகாரத்தில் சினிமா துறையினருக்கு போதைப்பொருள் சப்ளை செய்த கும்பலைச் சேர்ந்தவர்கள் பலர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், 'வெள்ளிமலை' உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகை அஞ்சு கிருஷ்ணாவும், போதைப்பொருள் பயன்படுத்தியதாக சென்னை வளசரவாக்கத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் துணை நடிகை நிவேதா உள்ளிட்ட 9 பேர் கைதாகியுள்ளனர். அவர்களிடம் இருந்து மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கைதானவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போதைப்பொருள் பயன்படுத்தியதாக சினிமா நடிகை கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications