தேர்தல் டைம்ல நடந்த சம்பவம்! கவுதமி லெட்டர்ல இதை கவனிச்சீங்களா? வானதி வேற! அண்ணாமலைக்கு நெருக்கடி
சென்னை: நடிகை கவுதமி பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பில் அண்ணாமலை மீது மறைமுகமாக கவுதமி புகார்களை வைத்துள்ளார்.
பாஜகவில் இருந்து விலக்கியதற்கு அழகப்பன் என்ற பாஜக நிர்வாகி மீது கவுதமி புகார் வைத்துள்ளார். அதில், சி.அழகப்பன் எனது பணம், சொத்து மற்றும் ஆவணங்களை மோசடி செய்து என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளார்.

அழகப்பன் 20 ஆண்டுகளுக்கு முன்பு, எனது தனிமையை கண்டு என்னை அணுகினார், ஏனெனில் நான் என் பெற்றோர் இருவரையும் இழந்த ஒரு அனாதை மட்டுமல்ல, ஒரு கைக்குழந்தையுடன் கணவர் இன்றி ஒரு தாயாகவும் இருந்தேன். அக்கறையுள்ள ஆண் என்ற போர்வையில் அவர் என்னையும் எனது குடும்பத்தையும் ஆதரிப்பது போல வந்தார். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்தச் சூழ்நிலையில்தான் எனது பல நிலங்களின் விற்பனை மற்றும் ஆவணங்களை அவரிடம் ஒப்படைத்தேன், சமீபத்தில்தான் அவர் என்னிடம் மோசடி செய்ததைக் கண்டுபிடித்தேன். என்னையும் என் மகளையும் அவரது குடும்பத்தில் ஒரு அங்கமாக வரவேற்பது போல் பாசாங்கு செய்து அவர் நன்றாக ஏமாற்றிவிட்டார். .
நான் உழைத்து சம்பாதித்த பணம், சொத்துக்கள் மற்றும் ஆவணங்களை மீட்டெடுப்பதற்காக, கடுமையாக போராடி வருகிறேன் , என்று கூறியுள்ளார்.

அண்ணாமலை மீது புகாரா? : இதொரு நிற்காமல் பாஜக நிர்வாகிகள் மீதும்.. தலைமை மீதும் புகார் வைத்துள்ளார். அதில், 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின்போது, ராஜபாளையம் தொகுதியின் வளர்ச்சியை உறுதி செய்ய பாடுபென்டன். பாஜக சார்பாக தொகுதியில் போட்டியிட உறுதியளித்தேன். ராஜபாளையம் மக்களுக்காகவும், அடிமட்ட அளவில் பாஜகவை வலுப்படுத்துவதற்காகவும் என்னை அர்ப்பணித்தேன். எனினும், கடைசி நிமிடத்தில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டது.
ஆனால் அதை எல்லாம் பொருட்படுத்தாமல், கட்சி மீதான எனது உறுதிப்பாட்டைக் காப்பாற்றினேன். இருப்பினும் 25 வருடங்கள் கட்சிக்கு உறுதியான விசுவாசம் இருந்தும், எனக்கு அழகப்பன் விவகாரத்தில் முழு ஆதரவு இல்லாததையும், மேலும் பாஜகவின் பல மூத்த உறுப்பினர்கள் அழகப்பனுக்கு உதவி செய்து வருவதையும் உணரும்போது உடைந்து போய் கட்சியில் இருந்து வெளியேறுகிறேன், என்று கூறியுள்ளார்.
தேர்தல் வாய்ப்பு: முக்கியமாக தேர்தலில் வாய்ப்பு கிடைக்காததை மறைமுகமாக அவர் சுட்டிக்காட்டி புலம்பி உள்ளார். வானதிக்கு இது பெரிய பிரஷராக மாறியுள்ளது. இப்போது இந்த விவகாரத்தில் வானதி வருத்தம் தெரிவித்துள்ளார். கவுதமியை எதிர்க்காமல்.. மறைமுகமாக அவருக்கு ஆதரவாக பேசி உள்ளார்.

பாஜகவில் இருந்து விலகுவதாக நடிகை கவுதமி கடிதம் அளித்தது வருத்தம் அளிக்கிறது. தன்னம்பிக்கை தைரியம் கொண்ட கவுதமி கட்சியின் அடிப்படை தொண்டராக இருந்தார். அவர் சென்றது வருத்தம் தருகிறது என்று வானதி சீனிவாசன் காட்டமாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே பாஜகவில் இருந்து காயத்திரி ரகுராம் தொடங்கி பல சினிமா நிர்வாகிகள் .. குறிப்பிட்ட ஜாதியினர் வெளியேறி வருகின்றனர்.
இந்த நிலையில்தான் கட்சி மற்றும் தலைவர்களிடமிருந்து எனக்கு எந்த ஆதரவும் இல்லை. அதுமட்டுமல்லாமல், என் நம்பிக்கைக்கு துரோகம் செய்து என் வாழ்நாள் சம்பாத்தியத்தை ஏமாற்றியவன் ஒருவனுக்கு கட்சியில் பலர் தீவிரமாக உதவுகிறார்கள், அந்த ஏமாற்று காரனுக்கு நெருங்கிய நண்பனாக இருக்கிறார்கள் என்பதும் எனக்குத் தெரியும்., என்று கூறிவிட்டு கவுதமி விலகி உள்ளார்.
-
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம் -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக! -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு? -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்!












Click it and Unblock the Notifications