டான்ஸ் ஆடுவதை நிறுத்தாதே கண்ணா!.. மகளுக்கு கடிதம் எழுதிவிட்டு நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி
Recommended Video
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே கூடுவாஞ்சேரியில் கடிதம் எழுதி வைத்துவிட்டு நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சின்னத்திரைகளில் நடித்து வருபவர் நடிகை ஜெயஸ்ரீ. முதல் கணவருக்கு பிறந்த மகள் இருக்கும் நிலையில் 2-ஆவது ஈஸ்வரை திருமணம் செய்து கொண்டார்.
இவரும் சின்னத்திரை நடிகரே. இவருக்கும் நடிகை மகாலட்சுமிக்கும் இடையே தவறான தொடர்பு இருப்பதாகவும் அவரது பேச்சை கேட்டுக் கொண்டு ஈஸ்வர் தன்னையும் தன் குழந்தையையும் கொடுமைப்படுத்துவதாக ஜெயஸ்ரீ புகார் தெரிவித்தார்.

மகாலட்சுமி
மேலும் மகாலட்சுமி வீட்டுக்கு சென்று ஜெயஸ்ரீ கலாட்டா செய்ததாகவும் புகார் எழுந்தது. ஆனால் அந்த புகாரை ஜெயஸ்ரீ மறுத்தார். மேலும் தான் அவரது வீட்டுக்கு சென்றேனா என்பதை அங்குள்ள சிசிடிவியை பார்த்துவிட்டு தெரிந்து கொள்ளுமாறும் போலீஸில் ஜெயஸ்ரீ தெரிவித்தார்.

மாத்திரைகள்
மேலும் ஈஸ்வர் குடித்துவிட்டு தனது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாகவும் தனது புகாரில் கூறியிருந்தார். இந்த நிலையில் கோர்ட், கேஸ் என அலைந்து கொண்டிருந்த ஜெயஸ்ரீ, கூடுவாஞ்சேரியில் உள்ள தனது வீட்டில் மாத்திரைகளை சாப்பிட்டுள்ளார்.

கடிதம்
மயங்கிய நிலையில் கிடந்த ஜெயஸ்ரீ மீட்கப்பட்டு நீலாங்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் அவர் எழுதிய கடிதத்தையும் போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.

ஈஸ்வருக்கு வேண்டுகோள்
அதில் எந்த சூழலிலும் டான்ஸ் ஆடுவதை நிறுத்தாதே என தனது மகளுக்கு அறிவுரை வழங்கிய ஜெயஸ்ரீ தனது முடிவுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் தனது மகளை தொல்லை செய்ய வேண்டாம் என ஈஸ்வருக்கு அதே கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications