ஊரடங்கிற்கு பிறகும் சம்பாதிக்கும் பணத்தை டாஸ்மாக்கில் கொடுக்காமல் தாய்மார்களிடம் கொடுங்கள்- கஸ்தூரி
சென்னை: ஊரடங்கு முடிந்த பிறகும் சம்பாதிக்கும் பணத்தை டாஸ்மாக்கில் கொடுக்காமல் தாய்மார்களிடம் கொடுங்கள் என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
Recommended Video
நாடு முழுவதும் அன்னையர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. திரைப்பிரபலங்கள், அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் என தங்கள் தாய்க்கும் தாயை போன்ற மற்றவர்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

இது போல் நடிகை கஸ்தூரி வெளியிட்டுள்ள வீடியோவில் கூறுகையில் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு சூப்பர் ஹீரோ இருக்காங்க. அதுதான் அம்மா. சாகசங்கள், தியாகங்களை செய்வது சவால்களை சந்திப்பது, இதெல்லாம் தாய்மார்களுக்கு அன்றாட பணியாகும்.
அதுவும் ஊரடங்கு சமயத்தில் எல்லாரும் வீட்டிலேயே இருக்கிறார்கள். தாய்மார்களுடைய சவால்களும் பொறுப்புகளும் ரொம்பவே அதிகமாகிவிட்டது. ஆனால் அம்மா செய்யும் எல்லாவற்றையும் பக்கத்திலேயே இருந்து பார்க்கும் வாய்ப்பு குடும்பத்தினருக்கு கிடைத்துள்ளது.
இதனால் அம்மாக்களுக்கு சந்தோஷம் அதிகமாகிவிட்டது. பாராட்டுகள் அதிகமாகிவிட்டது. அவர்களின் முகங்களில் புன்னகையும் அதிகமாகிவிட்டது. ஊரடங்கு முடிந்தவுடன் தாய்மார்களுடைய புன்னகை அவர்களின் முகத்திலேயே தொடரலாமே!
அதுக்கு நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை டாஸ்மாக்கிற்கு கொடுக்காமல் தாய்மார்களுக்கு கொடுத்தால் உங்கள் வீடும் நல்லாயிருக்கும், தாய்தமிழ் நாடும் நல்லாயிருக்கும். எல்லோருக்கும் என் இதயம் கனிந்த அன்னையர் தின வாழ்த்துகள் என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications