எஸ்ஆர் எம்மில் என்னதான் நடக்குது.. உண்மையை சொல்லுங்களேன்.. கஸ்தூரி ஆதங்கம்
எஸ்ஆர்எம் கல்லூரி தற்கொலைகளின் உண்மை தன்மை என்ன? என்று கஸ்தூரி கேள்வி எழுப்பி உள்ளார்
சென்னை: "எஸ்ஆர்எம் கல்லூரியில் 2 பேர் தற்கொலை செய்தது குறித்து யாராவது உண்மையைச் சொல்லுங்களேன்" என்று நடிகை கஸ்தூரி கேட்டுள்ளார்.
இந்த இரு தற்கொலை சம்பவங்களும் சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தின. ஆனால் பெரிதாக பேசப்படாமல் போய் விட்டன. குறிப்பாக ஊடகங்களில் இது அதிகம் அடிபடவில்லை.
முதல் நாள் ஒரு மாணவி தற்கொலை செய்கிறார். அடுத்த நாள் மாணவன் தற்கொலை செய்கிறான் இருவருமே வேறு மாநிலத்தவர். இதுதான் சர்ச்சைக்கு முக்கியக் காரணம்.
திமுக சின்னம்
இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் இப்போது பெரிதாக வெடித்துள்ளது. அதற்கு முக்கியக் காரணம் எஸ்ஆர்எம் பல்கலைக்கழக நிறுவனர் பாரிவேந்தர் திமுக சின்னத்தில் போட்டியிட்டு எம்பி ஆகியிருப்பதால். இதனாலும் கூட இது பெரிதாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
|
என்ன நடக்குது?
இந்த நிலையில் நடிகை கஸ்தூரியும் இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் ஒரு டிவீட் போட்டுள்ளார். அதில் என்ன இருக்கிறது என்றால், "எஸ்ஆர்எம் கல்லூரி தற்கொலைகள் குறித்து சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. என்ன நடந்தது என்பது நாட்டுக்குத் தெரிய வேண்டும். யாராவது உண்மையை விளக்குவார்களா" என்று கேட்டுள்ளார் கஸ்தூரி.
|
தனிப்பட்ட காரணம்
இதற்கு அந்தக் கல்லூரியைச் சேர்ந்த யுவராஜ் என்பவர் பதிலளித்துள்ளார். அவர் கூறுகையில், "அக்கா நான் அங்குதான் வேலை பார்க்கிறேன். தனிப்பட்ட காரணத்தால்தான் இருவரும் தற்கொலை செய்து கொண்டனர். அதற்கு மேல் அதில் எதுவும் இல்லை . சமூக வலைதளங்கள்தான் தேவையில்லாமல் பிரச்சினை ஆக்குகின்றன" என்று கூறியுள்ளார்.
— Lantasco🇮🇳🏳️🌈 (@Lantasco1999) June 1, 2019 |
யுவராஜ்
ஆனால் இதற்கு ஒருவர் அளித்துள்ள பதில் டிவீட்டில், யுவராஜ் என்பவர் அந்தக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர். மேலும் திமுக தலைவர் மு.கஸ்டாலின் டிவீட்டை அவர் ரீட்வீட் செய்துள்ளார். அவரது பதிலில் எப்படி நியாயத்தை எதிர்பார்க்கலாம் என்று கேட்டுள்ளார்.
பரபரப்புகள்
மொத்தத்தில் இந்த தற்கொலை விவகாரத்தில் உண்மை என்னவென்று தெரியவில்லை. மாறாக பரபரப்புகள்தான் கச்சை கட்டி பறக்கின்றன. கஸ்தூரி கேட்கும் கேள்வியைத்தான் நாமும் கேட்கணும் போல இருக்கு.. உண்மையை யாராச்சும் சொல்லுங்கப்பா!