கஸ்தூரி போட்ட கோத்தபயா டிவீட்.. ஏங்க இப்படி பேசறீங்க.. வெடித்துக் கிளம்பிய கமெண்டுகள்!
கோத்தபய ராஜ்பக்சே பதவி ஏற்பு குறித்து கஸ்தூரி ட்வீட் போட்டுள்ளார்
Recommended Video
சென்னை: "பதவியேற்றார் கோத்தா பய்யா.." என்று நடிகை கஸ்தூரி ட்வீட் போட.. "ஏன் இப்படி அசிங்கமா பேசறீங்க" என்று கஸ்தூரியை கேள்வி கேட்டு கமெண்ட் போட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்!
இலங்கையில் போன சனிக்கிழமை அதிபர் தேர்தல் நடந்தது.. போன ஏப்ரல் மாதம் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்த காரணத்தினால், இந்த தேர்தலுக்காக பல இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. ஆனால் அதையும் மீறி துப்பாக்கிசூடு நடந்தது!
ஆளும் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கும் கோத்தபய ராஜபக்சேவுக்கும்தான் பலத்த போட்டி நிகழ்ந்தது.

தேர்தல் முடிவு
இறுதியில், சிங்களர்கள் அதிகமாக வசிக்கும் மாகாணங்களில் கோத்தபய ராஜபக்சே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன்படி புதிய அதிபராக 70 வயது கோத்தபய ராஜபக்சே பதவி ஏற்றார். இந்த தேர்தல் முடிவு குறித்து பல்வேறு பல அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
|
கோத்த பய்யா
அதன்படி, அரசியல் விஷயங்களை உன்னிப்பாக கவனித்து வரும் நடிகை கஸ்தூரியும் இதற்கு தன் கருத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், "பதவியேற்றார் கோத்தா பய்யா . ....இதுவும் கடந்து போம்." என ட்விட் செய்து உள்ளார்.
|
என்ன பண்றது?
இதற்கு நிறைய ட்விட்டர்வாசிகள் கமெண்ட் போட்டு வருகிறார்கள். அதில் பெரும்பாலோர், "ஏன் அசிங்கமாக பேசுறீங்க" என்று கஸ்தூரியை கேள்வி எழுப்பி உள்ளனர். "நாங்க என்ன பண்றது? கோத்தபாயவை எதிர்த்து போட்டியிட்டவரும் சிங்களர் அவரும் அவர்களுக்கு ஆதரவாக வாக்குறுதிகளை வைத்தார் தமிழர்கள் கோரிக்கையை ஏற்கமுடியாது என்றும் சொன்னார் அப்படி இருந்தும் சிங்களவர்கள் கோத்தாவ ஆதரிச்சதுக்கு ஒரே ஒரு காரணம் தான் தமிழரை அடக்கவேண்டும் என்பது தான்" என்று ஒருவர் தெரிவித்துள்ளார்.
|
எத்தனை வருஷம்?
"இதுவும் கடந்து போகும் .
இதே வார்த்தையை எத்தனை வருஷமா சொல்லிக்கொண்டே இருக்கிறது" என்கிறது மற்றொரு ட்வீட்
|
தூக்கி படிக்குது
"பாத்தியா மேன் பாப்பா கோத்தபய வை கோத்தா பய்யான்னு தூக்கி படிக்குது😂😂😂" என்று ஒரு ட்வீட் உள்ளது
|
மரியாதையா பேசுங்க
"ஹலோ கொஞ்சம் மரியாதையா பேசுங்க..." என்கிறது இன்னொரு ட்வீட்












Click it and Unblock the Notifications