நடிகை ரோஜா கொடுத்த ஒன்றரை கோடி கிஃப்ட்.. குவியும் வாழ்த்தும், கண்டனமும்.. என்ன நடந்தது?
நடிகை ரோஜா தன் மகனுக்கு பென்ஸ் காரை பரிசாக தந்துள்ளார்
சென்னை: தன்னுடைய மகனுக்கு ரூ.1.5 கோடி மதிப்பிலான பென்ஸ் காரை நடிகை ரோஜா கிப்ட் ஆக தந்திருக்கிறார்.. இது தற்போது சர்ச்சையை கிளப்பிவிட்டு வருகிறது.
நடிகை ரோஜா, தமிழ், தெலுங்கு சினிமா உலகில் தனக்கென ஒரு தனியிடத்தை பெற்றவர்.. 90களில் மிகவும் பிரபலமாக திரையுலகில் வலம் வந்தவர்.
சினிமா வாய்ப்புகள் குறைந்த நிலையில், திடீரென அரசியலிலும் என்ட்ரி தந்தார்.. ஆந்திர அரசியலில் ஃபயர் பிராண்ட் என்ற பெயரை பெற்றவர் நடிகை ரோஜா..

ரோஜா
ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து பல அதிரடிகளை செய்தனர்.. ஆந்திராவின் நகரி தொகுதி எம்எல்ஏ நடிகை ரோஜா, மேற்கொண்ட செயல்திட்டங்களும், அறிவிப்புகளும் மக்களிடம் விரைந்து சென்றடைந்தன.. இந்த அதிரடிகளுக்கு தனக்கு பெரிதும் காரணமாக இருப்பது மறைந்த ஜெயலலிதா தான் என்றும், அவரது பாணியையே தான் கையில் எடுத்து வருவதாகவும் அடிக்கடி நெகிழ்ச்சியுடன் சொல்லி வருபவர்...

பென்ஸ் கார்
சமீபத்தில் இவருக்கு அமைச்சர் பதவியும் தானாகவே தேடி வந்தது... சுற்றுலாத்துறை அமைச்சராக இருக்கிறார். இந்நிலையில் நடிகை ரோஜா, தன்னுடைய மகனுக்கு ஒன்றரைக் கோடி ரூபாய் மதிப்புள்ள பென்ஸ் காரை பரிசாக வழங்கியுள்ளார்... ரிஜிஸ்டிரேஷன் செய்யப்பட்ட புது காருக்கு முன்பு, மகனும், ரோஜாவும் நிற்பது போன்ற போட்டோவும் இணையத்தில் வைரலானது.

ரோஜா
இதற்கு பலரும் ரோஜாவுக்கும் அவரது மகனுக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.. அதேசமயம், பலர் கடுமையாகவும் விமர்சித்து வருகின்றனர்.. காரணம், ரோஜா சில வருடங்களுக்கு முன்பு ஒரு பேட்டியில், நான் ஒரு சாதாரண பெண்.. பணக்காரி கிடையாது.. கஷ்டப்பட்டுதான் மேலே வந்துள்ளேன் என்று கூறியிருந்தார்.. அந்த பேட்டியின் வீடியோவை பதிவிட்டு, எப்படி திடீரென சம்பாதித்துவிட்டீர்கள்? 'அமைச்சரானதால் சம்பாதித்து விட்டீரா என்று கேட்டு வருகிறார்கள்...

வதந்திகள்
இதற்கு ரோஜாவின் ரசிகர்களும், தொண்டர்களும் பதிலளித்து வருகின்றனர்.. சினிமாவில் நீண்ட காலம் கடினமாக உழைத்தவர் ரோஜா. டிவி தொடர்களிலும், பல நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று சம்பாதித்துள்ளார். அப்படி இருக்கும்போது, கார் வாங்க முடியாதா? அரசியல் காழ்ப்புணர்ச்சியால் யாரோ கிளப்பிவிடும் வதந்தி இது.. வாங்க முடியாத அளவுக்கு மோசமான நிலையில் ரோஜா இல்லை என்றும் ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications