"வாழ்க்கை என்பது ஆரம்பத்தில் கண்ட கனவை விட".. முதல்வர் விஜய்யை சந்தித்த பின் சமந்தா பதிவு
சென்னை : நடிகரும், தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய், கட்சி ஆரம்பித்த வெறும் இரண்டு ஆண்டுகளிலேயே, அதுவும் முதல் சட்டசபை தேர்தலிலேயே இமலாய வெற்றி பெற்று தமிழ்நாட்டில் ஆட்சியை பிடித்துள்ளார். தமிழ்நாட்டின் உச்ச நடிகராக பலட்சம் ரசிகர்களை கொண்ட விஜய், எம்ஜிஆருக்கு பின்னர் கட்சி ஆரம்பித்து முதல்வராகி உள்ளார். தங்களுடன் நடித்த சக நடிகர் தமிழ்நாட்டின் முதல்வர் என்பதை நினைத்து பல நடிகர், நடிகைகள் பெருமிதம் கொள்கிறார்கள். அவர்களில் பலர் முதல்வர் விஜய்யை சந்திக்க ஆர்வம் காட்டுகிறார்கள். தினமும் யாராவது ஒருவர் சந்திப்பது வாடிக்கையாக உள்ளது. அந்த வகையில் விஜய்யுடன் பல்வேறு படங்களில் நடித்த நடிகை சமந்தா இன்று சந்தித்தார். இந்த சந்திப்பு தொடர்பாக சமந்தா ஒரு பதிவும் வெளியிட்டுள்ளார்.

நடிகரும், தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆகி இருப்பதை தமிழ் திரையுலகினர் பலர் கொண்டாடுகிறார்கள். தங்களில் இருந்து ஒருவர் தமிழ்நாட்டை ஆள்வதை பெருமையாக கருதுகிறார்கள். பலர் முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளார்கள்.
சமந்தா விஜய் உடன் சந்திப்பு
விஜய் முதல்வராக பதவியேற்று 37 நாட்கள்ஆகிவிட்ட நிலையில், தினமும் சில நடிகர்கள் முதல்வர் விஜய்யை சந்திப்பது வழக்கமான நிகழ்வாக இருக்கிறது. தினமும் மாலை நேரத்தில் யாராவது ஒரு நடிகர், நடிகையை விஜய்யை சந்தித்து புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்ட வண்ணம் உள்ளனர். அண்மையில் நடிகர் சிம்பு, விஷால், நடிகைகள், குஷ்பு, சிம்ரன் உள்பட பலர் நேரில் சந்தித்தனர். அந்த வகையில் நடிகை சமந்தா இன்று முதல்வர் விஜய்யை சந்தித்துள்ளார்.
சமந்தா பதிவு
இது தொடர்பாக சமந்தா வெளியிட்டுள்ள பதிவில், "இன்று நான் சென்னையில் வந்து இறங்கியபோது, எனக்குள் ஒரு எல்லையற்ற மகிழ்ச்சி உண்டானது. காரணம், நான் நம்முடைய முதலமைச்சரை (CM) சந்திக்கச் சென்று கொண்டிருந்தேன்.
விஜய் சார் எப்போதுமே திரையில் தோன்றும் ஒரு சாதாரண ஹீரோவாக மட்டும் இருக்க வேண்டியவர் அல்ல என்று நான் எப்போதும் நினைப்பதுண்டு. அவருடைய ஆற்றல், அவருடைய ஆளுமைத்திறன் மற்றும் மக்கள் அவர் மீது காட்டும் அன்பு... இவை எல்லாமே அவர் ஏதோ ஒரு பெரிய விஷயத்திற்காகப் படைக்கப்பட்டவர் என்பதை எனக்கு உணர்த்திக் கொண்டே இருக்கும்.
விஜய்யின் துணிச்சல்
என்னை எல்லாவற்றையும் விடப் பெரிதும் ஈர்ப்பது எதுவென்றால், முற்றிலும் புதிய ஒரு களத்திற்குள் நுழைவதற்குத் தேவைப்படும் அந்தத் துணிச்சல்தான்! தான் ஏற்கனவே சாதித்து, உச்சத்தில் இருக்கும் ஒரு துறையை அப்படியே விட்டுவிட்டு, சவால்களும் ஆபத்துகளும் நிறைந்த, மிக மிக முக்கியமான ஒரு புதிய சவாலைத் கையில் எடுப்பது சாதாரண விஷயமல்ல. அது எளிதானது என்பதால் அவர் அதைச் செய்யவில்லை; மாறாக, நம்மால் ஏதேனும் ஒரு நல்ல மாற்றத்தை உருவாக்க முடியும் என்று அவர் ஆழமாக நம்புவதால் அதைச் செய்திருக்கிறார்.
ஏதாவது செய்ய வேண்டும்
நம் வாழ்க்கையின் ஏதோ ஒரு கட்டத்தில், நாம் அனைவரும் இன்னும் கூடுதலாக ஏதேனும் செய்ய வேண்டும், நம்மைத் தாண்டி இந்தச் சமூகத்திற்கு நம்மால் என்ன பங்களிப்பைத் தர முடியும் என்று யோசிக்கத் தூண்டப்படுவோம் என்று நான் நினைக்கிறேன். ஆனால், மிகச் சிலரே அந்த உள்மனக் குரலுக்குச் செவிசாய்த்து களத்தில் இறங்குகிறார்கள்.
விஜய் சாரின் நம்பிக்கை
ஏற்கனவே விஜய் சார் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருக்கும் மனிதர்களைக் கூட, அவர் தனது செயல்பாடுகளால் ஆச்சரியப்படுத்துவார் என்ற ஒரு வலுவான நம்பிக்கை எனக்குள் இருக்கிறது. அது அவர் வகிக்கும் பதவியால் அல்ல, மாறாக அவர் இந்த நிலையை அணுகும் அந்த நல்ல எண்ணத்தினால் சாத்தியமாகும்.
வாழ்க்கை கனவு
அவர் தேர்ந்தெடுத்திருக்கும் இந்தப் பாதையில் தொடர்ந்து பயணிக்கத் தேவையான மனவலிமையும், ஞானமும், துணிச்சலும் அவருக்குக் கிடைக்க வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன். இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு இளைஞருக்கும் நான் சொல்லிக் கொள்வது ஒன்றுதான்-வாழ்க்கை என்பது நீங்கள் ஆரம்பத்தில் கண்ட கனவை விடவும், இன்னும் பல மடங்கு பெரியதாக மாறக்கூடும் என்பதற்கு இதுவே ஒரு சிறந்த உதாரணம்!"
-
ரிப்போர்ட்டில் ஷாக் விஷயமே இதுதான்.. வெள்ளை அறிக்கையில் நிதியமைச்சர் வில்சன் அதிர்ச்சித் தகவல்! -
போக்குவரத்து துறைக்குள் ஒளிந்திருக்கும் பூதம்.. வெள்ளை அறிக்கையில் வெளிவந்த உண்மை! -
மரிய வில்சன் கொடுத்த ஷாக்.. புதிய திட்டங்களுக்கு பிரேக் வருமா? அப்போ ரூ.2500 மகளிர் உரிமைத்தொகை? -
அடுத்து ராஜினாமாவுக்கு ரெடியாகும் 3 தலைகள்.. ’மறுமலர்ச்சி’யுடன் விஜய்! பனையூர் போட்ட பக்கா ஸ்கெட்ச்! -
”தவெக ஆட்சியில் ஒரு பைசா கூட வாங்காமல் வேலை நடக்குது” தனியார் பள்ளி கூட்டமைப்பினர் நெகிழ்ச்சி -
விஜய் அதிரடி உத்தரவு.. சென்னை அடையாளம் தெரியாத அளவுக்கு மாறப்போகுது.. 3வது மாஸ்டர் பிளான்! -
“கோட் போட்டு வந்தாரு.. டிபன் எடுத்து வந்தாரு.. நாட்டுல பல அக்கிரமம் நடக்குது” விஜய்யை சாடிய ஸ்டாலின் -
சிரிக்க கூட முடியாத அளவிற்கு.. அப்செட்டான விஜய்.. மனசை குடையும் 2 விஷயங்கள்! என்ன நடந்தது? -
வெளியானது தமிழக நிதி நிலை வெள்ளை அறிக்கை! திமுக ஆட்சியில் கடன் 2 மடங்கானதாக குற்றச்சாட்டு! -
2500 ரூபாய் மகளிர் உரிமை தொகை.. சட்டசபையில் விஜய் வெளியிடுவாரா.. அமைச்சர் வன்னியரசு பேட்டி -
இடைத்தேர்தலில் களமிறங்கும் வைகோ? முதல்வர் விஜய் உடன் சந்திப்பு.. நெருங்கும் மதிமுக - தவெக! -
மாஸ்டர் மகேந்திரன் திடீரென்று மன்னிப்பு கேட்ட காரணம் இதுதானா? பின்னணியில் விழுந்த "டோஸ்”! -
எதிர்ப்புக்கு பணிந்தது விஜய் அரசு.. விவசாயிகளுக்கு ரூ.75,000 வரை பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி! -
ஓசூர்-க்கு ஓடிவந்த இஸ்ரேல் நிறுவனம்.. ஈரான் போருக்கு நடுவில் சூளகிரி-யில் மாஸ்டர் பிளான்! -
சினிமா துறைக்கு ரெட் கார்பெட்.. அதிமுக மாஜிக்களுடன் நோ சந்திப்பு.. விஜய்யின் செயலால் அப்செட்!














Click it and Unblock the Notifications