அவதூறு கருத்து! அதிமுக முன்னாள் நிர்வாகி சேலம் ஏ.வி.ராஜூ மன்னிப்பு கேட்க நடிகை த்ரிஷா நோட்டீஸ்
சென்னை: தன்னை பற்றி அவதூறாக பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு 24 மணி நேரத்திற்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என நடிகை த்ரிஷா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
சேலம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்தவர் ஏ.வி.ராஜூ. இவர் அண்மையில்தான் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியின் போது நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது. இதற்கு பலர் கண்டனங்களை தெரிவித்திருந்தனர். திரைத்துறையை சேர்ந்த இயக்குநர் சேரன், மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் ஏ.வி.ராஜூவுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தனர்.
நடிகை த்ரிஷாவும் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனங்களை தெரிவித்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: கவனத்தை ஈர்ப்பதற்காக எந்த நிலைக்கும் கீழே இறங்கும் கீழ்த்தரமான மற்றும் கேவலமான மனிதர்களை பார்க்கவே அருவருப்பாக இருக்கிறது. அவர் மீது தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். எனது சட்ட வல்லுநர்கள் செய்ய வேண்டியதை செய்வர்.
பொதுவெளியில் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் மான நஷ்ட வழக்கு தொடருவேன் என எச்சரித்திருந்தார். இதைத் தொடர்ந்து ஏ.வி. ராஜூ ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் தான் எந்த நடிகையையும் தவறாக பேசவில்லை, தவறாக சித்தரிக்கப்பட்டுவிட்டது. ஒரு வேளை நான் பேசியது யார் மனதையாவது கஷ்டப்படுத்திருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ராஜூ தெரிவித்திருந்தார்.
— Trish (@trishtrashers) February 22, 2024
இந்த நிலையில் நடிகை த்ரிஷா, ஏ.வி.ராஜுவுக்கு ஒரு வக்கீல் நோட்டீஸை அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: என்னை பற்றி சேலம் அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜூ அவதூறாக பேசியதால் நான் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன்.
இந்த நோட்டீஸை பெற்ற 24 மணி நேரத்திற்குள் என்னிடம் ஏ.வி.ராஜு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். தமிழ், ஆங்கில செய்தித்தாள்களில் மன்னிப்பு கேட்டு விளம்பரம் வெளியிட வேண்டும். தொலைகாட்சிகள், யூடியூப் சேனல்களிலும் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட வேண்டும். அவ்வாறு மன்னிப்பு கேட்காவிட்டால் மானநஷ்ட வழக்கு தொடருவேன். சமூகவலைதளங்கள் உள்ளிட்டவைகளில் என்னை பற்றி பேசிய கருத்துகள் அடங்கிய அனைத்து பதிவுகளையும் ஏ.வி.ராஜு அவருடைய சொந்த செலவில் நீக்க வேண்டும். இவ்வாறு த்ரிஷா தனது வக்கீல் நோட்டீஸில் தெரிவித்துள்ளார். ஏ.வி. ராஜு என்ன பேசினார் என்பதற்கான பதிவுகளையும் த்ரிஷா இணைத்து அனுப்பியுள்ளார்.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்!












Click it and Unblock the Notifications