Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னைக்கு குட்நியூஸ்.. கிளாம்பாக்கத்தில் இருந்து மே 10, 11ல் கூடுதல் பஸ்கள்! பயணிகள் ஹேப்பி

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோடை விடுமுறையையொட்டி பொதுமக்கள் சென்னையில் இருந்து சொந்த ஊர் சென்று வருகின்றனர். இந்நிலையில் தான் வார இறுதி நாளான மே 10 (நாளை) மற்றும், நாளை மறுநாள் (மே 11) ஆகிய தேதிகளில் சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

சென்னையில் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்ட மக்கள் வசித்து வருகின்றனர். தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தேர்வுகள் முடிந்து விடுமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தான் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக சொந்த ஊர்களக்கு சென்று வருகின்றனர்.

Additional buses will operates on May 10 and 11 from Kilambakkam in chennai

குறிப்பாக வார இறுதி நாட்களில் வழக்கத்தை விட தற்போது பஸ் நிலையங்களில் அதிகளவிலான மக்கள் கூடுகின்றனர். இதனால் ஒவ்வொரு வார இறுதி நாட்களிலும் சென்னையில் இருந்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

பொதுமக்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சிரமமின்றி சொந்த ஊர் செல்ல வசதியாக தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நாளை (மே 10) மற்றும் நாளை மறுநாள் (மே 11) ஆகிய 2 நாட்கள் சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து வழக்கமாக இயங்கும் பஸ்களுடன் கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ‛‛வார இறுதி நாட்களில் தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்க போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி கிளாம்பாக்கம் பஸ் முனையத்தில் இருந்து திருவண்ணாமலை திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, கன்னியாகுமரி, சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட இடங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

அதன்படி வார இறுதி நாளான வெள்ளிக்கிழமை (அதாவது மே 10)ம் தேதி வழக்கத்தை விட 425 பஸ்களும், சனிக்கிழமையில் (அதாவது மே 11) வழக்கத்தை விட 505 பஸ்களும் கூடுதலாக இயக்கப்பட உள்ளது.'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 2 நாட்களில் சென்னையில் இருந்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களுக்கு மொத்தம் 935 பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட உள்ளது.

அதேபோல் வார விடுமுறை முடிவடைந்த பிறகு தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் இருந்து பொதுமக்கள் சென்னை திரும்பி வர வசதியாக சென்னைக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இந்த பஸ்கள் ஞாயிற்றுக்கிழமையில் முக்கிய நகரங்களில் இருந்து சென்னை கிளாம்பாக்கத்துக்கு இயங்க உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+