சென்னைக்கு குட்நியூஸ்.. கிளாம்பாக்கத்தில் இருந்து மே 10, 11ல் கூடுதல் பஸ்கள்! பயணிகள் ஹேப்பி
சென்னை: கோடை விடுமுறையையொட்டி பொதுமக்கள் சென்னையில் இருந்து சொந்த ஊர் சென்று வருகின்றனர். இந்நிலையில் தான் வார இறுதி நாளான மே 10 (நாளை) மற்றும், நாளை மறுநாள் (மே 11) ஆகிய தேதிகளில் சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
சென்னையில் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்ட மக்கள் வசித்து வருகின்றனர். தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தேர்வுகள் முடிந்து விடுமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தான் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக சொந்த ஊர்களக்கு சென்று வருகின்றனர்.

குறிப்பாக வார இறுதி நாட்களில் வழக்கத்தை விட தற்போது பஸ் நிலையங்களில் அதிகளவிலான மக்கள் கூடுகின்றனர். இதனால் ஒவ்வொரு வார இறுதி நாட்களிலும் சென்னையில் இருந்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
பொதுமக்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சிரமமின்றி சொந்த ஊர் செல்ல வசதியாக தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நாளை (மே 10) மற்றும் நாளை மறுநாள் (மே 11) ஆகிய 2 நாட்கள் சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து வழக்கமாக இயங்கும் பஸ்களுடன் கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ‛‛வார இறுதி நாட்களில் தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்க போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி கிளாம்பாக்கம் பஸ் முனையத்தில் இருந்து திருவண்ணாமலை திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, கன்னியாகுமரி, சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட இடங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
அதன்படி வார இறுதி நாளான வெள்ளிக்கிழமை (அதாவது மே 10)ம் தேதி வழக்கத்தை விட 425 பஸ்களும், சனிக்கிழமையில் (அதாவது மே 11) வழக்கத்தை விட 505 பஸ்களும் கூடுதலாக இயக்கப்பட உள்ளது.'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 2 நாட்களில் சென்னையில் இருந்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களுக்கு மொத்தம் 935 பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட உள்ளது.
அதேபோல் வார விடுமுறை முடிவடைந்த பிறகு தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் இருந்து பொதுமக்கள் சென்னை திரும்பி வர வசதியாக சென்னைக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இந்த பஸ்கள் ஞாயிற்றுக்கிழமையில் முக்கிய நகரங்களில் இருந்து சென்னை கிளாம்பாக்கத்துக்கு இயங்க உள்ளது.
-
பிஎஃப் பணம்.. மாத சம்பளம் வாங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு.. சென்னை உள்பட 10 இடங்களில் முகாம் -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
சென்னையின் தலையெழுத்தை மாற்றும் ப்ராஜெக்ட்.. ரெடியாகும் 'ரூட் மேப்'... எகிறப்போகும் வேகம்! -
Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவுமா? சென்னையில் பீதி.. பொது சுகாதாரத்துறை விளக்கம் -
ரயில்கள் மீது கல் வீசினால் 10 ஆண்டு ஜெயில் தண்டனை.. சென்னை ரயில்வே கோட்டம் கடும் எச்சரிக்கை! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல!












Click it and Unblock the Notifications