Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

5 சீனியர் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் தலைமை செயலாளர் அந்தஸ்து.. ககன்தீப் சிங்குக்கு அடித்த ஜாக்பாட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சீனியர் ஐஏஎஸ் அதிகாரிகள் 5 பேருக்கு முதன்மை செயலாளர் பதவியில் இருந்து தலைமை செயலாளர் அந்தஸ்துக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ககன் தீப் சிங் உள்பட 5 அதிகாரிகளுக்கு கூடுதல் தலைமை செயலாளர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:- சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் ககன் தீப் சிங் பேடி, தகவல் தொழில்நுட்பவியல் துறை முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார், சென்னை துறைமுக பொறுப்புக் கழக தலைவர் சுனில் பாலிவால் ஆகியோர் கூடுதல் தலைமை செயலாளர் அந்தஸ்துக்கு ரேங்கிற்கு உயர்த்தப்படுகின்றனர்.

additional-chief-secretary-status-to-5-senior-ias-officers-including-gagandeep-singh-bedi

அதேபோல, தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு நிதி சேவைகள் கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் எஸ்.விஜயகுமார், சுற்றுலா, கலை மற்றும் இந்து சமய அறநிலையத் துறை முதன்மைச் செயலாளர் மணிவாசன் ஆகியோர் முதன்மைச் செயலாளர் நிலையில் இருந்து கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்துக்கு பதவி உயர்வு பெற்று இருக்கிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தலைமைச் செயலாளர் பதவி ஒன்றுதான் உள்ளதால், 5 அதிகாரிகளும் கூடுதல் தலைமைச் செயலாளர் என்று அழைக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ககன் தீப் சிங்: முதல்வர் ஸ்டாலினின் குட்புக்கில் உள்ள அதிகாரிகள் பட்டியலில் இருக்கும் ககன் தீப் சிங், பல்வேறு துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு நற்பெயரை பெற்றவர். 1993ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணியைத் தொடங்கிய ககன் தீப் சிங் பேடி, குமரி மாவட்ட ஆட்சியராகவும், மதுரை, கோவையில் ஆணையராகவும் பணியாற்றினார்.

2004-ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின்போது கடலூர் மாவட்டத்தில் ஆட்சியராக இருந்த ககன் தீப் சிங் பேடி மேற்கொண்ட நிவாரணப்பணிகள் அவருக்கு பெரும் பாராட்டுக்களை பெற்று கொடுத்தது. 2015ம் ஆண்டு வெள்ளத்தின் போது கடலூர் மாவட்டத்தில் ஒரு மாத காலம் இரவு பகல் பாராமல் பணியாற்றி, விரைவில் நிலைமை சீரடைய உதவினார்.

சுகாதாரத்துறை செயலாளர்: எந்த துறைக்கு போனாலும் அதில் சிறப்பாக பணியாற்றக்கூடியவர் என்று அறியப்படுவராக ககன் தீப் சிங் பேடி உள்ளார். கடந்த மே மாதம் தான், சென்னை மாநகாரட்சி ஆணையர் பொறுப்பில் இருந்து சுகாதாரத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில், கூடுதல் தலைமை செயலாளர் அந்தஸ்தும் தற்போது வழங்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+